<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>தமிழ்நாடு தென்னம்பால் இயக்கம்</title>
	<atom:link href="http://thennaitamilnadu.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://thennaitamilnadu.wordpress.com</link>
	<description>அன்னையின் பால் அன்பிற்கு ! தென்னையின் பால் தெம்பிற்கு !</description>
	<lastBuildDate>Sat, 19 Mar 2011 09:30:17 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='thennaitamilnadu.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>தமிழ்நாடு தென்னம்பால் இயக்கம்</title>
		<link>http://thennaitamilnadu.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://thennaitamilnadu.wordpress.com/osd.xml" title="தமிழ்நாடு தென்னம்பால் இயக்கம்" />
	<atom:link rel='hub' href='http://thennaitamilnadu.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>கள் பற்றிய சீமான் பேச்சு</title>
		<link>http://thennaitamilnadu.wordpress.com/2011/03/19/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/</link>
		<comments>http://thennaitamilnadu.wordpress.com/2011/03/19/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/#comments</comments>
		<pubDate>Sat, 19 Mar 2011 09:30:16 +0000</pubDate>
		<dc:creator>thennaitamilnadu</dc:creator>
				<category><![CDATA[others]]></category>

		<guid isPermaLink="false">http://thennaitamilnadu.wordpress.com/?p=92</guid>
		<description><![CDATA[கள் பற்றிய சீமான் பேச்சு by Ram Kumar<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thennaitamilnadu.wordpress.com&amp;blog=7126894&amp;post=92&amp;subd=thennaitamilnadu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>கள் பற்றிய சீமான் பேச்சு</p>
<span style="text-align:center; display: block;"><a href="http://thennaitamilnadu.wordpress.com/2011/03/19/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/"><img src="http://img.youtube.com/vi/kboFpYj0ErA/2.jpg" alt="" /></a></span>
<p>by Ram Kumar</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/thennaitamilnadu.wordpress.com/92/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/thennaitamilnadu.wordpress.com/92/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/thennaitamilnadu.wordpress.com/92/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/thennaitamilnadu.wordpress.com/92/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/thennaitamilnadu.wordpress.com/92/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/thennaitamilnadu.wordpress.com/92/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/thennaitamilnadu.wordpress.com/92/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/thennaitamilnadu.wordpress.com/92/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/thennaitamilnadu.wordpress.com/92/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/thennaitamilnadu.wordpress.com/92/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/thennaitamilnadu.wordpress.com/92/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/thennaitamilnadu.wordpress.com/92/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/thennaitamilnadu.wordpress.com/92/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/thennaitamilnadu.wordpress.com/92/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thennaitamilnadu.wordpress.com&amp;blog=7126894&amp;post=92&amp;subd=thennaitamilnadu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://thennaitamilnadu.wordpress.com/2011/03/19/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/fefd5c3a8e5f2be9345e0f4ba11cbd37?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thennaitamilnadu</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>செய்திகள்</title>
		<link>http://thennaitamilnadu.wordpress.com/2011/01/21/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://thennaitamilnadu.wordpress.com/2011/01/21/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 21 Jan 2011 15:05:42 +0000</pubDate>
		<dc:creator>thennaitamilnadu</dc:creator>
				<category><![CDATA[others]]></category>

		<guid isPermaLink="false">http://thennaitamilnadu.wordpress.com/?p=61</guid>
		<description><![CDATA[சட்டப்பேரவை வளாகத்தில் பிப்.10-ல் கள் விற்பனை செய்யப்படும்: கள் இயக்கம் தீர்மானம் First Published : 07 Feb 2011 09:36:53 AM IST தினமணி கோவை, பிப். 6: சட்டப்பேரவை வளாகத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி கள் விற்கப்படும் என்று தமிழ்நாடு கள் இயக்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு கள் இயக்கத்தின் மாநில ஆலோசனைக் கூட்டம், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.பழனிசாமி தலைமையில் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்கும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thennaitamilnadu.wordpress.com&amp;blog=7126894&amp;post=61&amp;subd=thennaitamilnadu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>சட்டப்பேரவை வளாகத்தில் பிப்.10-ல் கள் விற்பனை செய்யப்படும்: கள் இயக்கம் தீர்மானம்</strong></p>
<p>First Published : 07 Feb 2011 09:36:53 AM IST  தினமணி</p>
<p>கோவை, பிப். 6: சட்டப்பேரவை வளாகத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி கள் விற்கப்படும் என்று தமிழ்நாடு கள் இயக்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.<br />
 தமிழ்நாடு கள் இயக்கத்தின் மாநில ஆலோசனைக் கூட்டம், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.பழனிசாமி தலைமையில் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.<br />
 கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்கும் பொருட்டு நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன் தலைமையிலான குழுவின் அறிக்கையை வெளியிட தமிழ்நாடு அரசு மறுத்து வருகின்றது. தமிழக சட்டப்பேரவை இடைக்கால நிதிநிலைக் கூட்டத் தொடரின் போது, மக்களின் நலன் கருதி, அரசு கொண்டிருக்கும் மதுக் கொள்கை மற்றும் மதுவிலக்கில் மாற்றங்கள் பற்றிய அறிவிப்பு இருக்கும் என கள் இயக்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.<br />
      ஏற்கெனவே அறிவித்தபடி சட்டப்பேரவை வளாகத்தில் கள் விற்கப்படும். இதன்படி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும், அரசுக்கும், காவல்துறைக்கும் இடையூறு இல்லாமல் கள் விற்பனை மேற்கொள்ளப்படும். சட்டப்பேரவை வளாகப் பகுதியில் அமைதி காப்பதும், சபை நடவடிக்கைகளுக்கு இடையறு செய்யாமல் இருப்பதும் அவசியமாகின்றது.<br />
       தமிழ்நாடு கள் இயக்கத்தின் கொங்கு மண்டல அமைப்பாளரும், தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசகருமான பி.கே.ராமசாமி மட்டும் சட்டப்பேரவை வளாகத்தில் பிப்ரவரி 10-ம் தேதி காலை 11 மணிக்கு கள் விற்பனையை மேற்கொள்வார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.<br />
     இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.<br />
 பொருட்காட்சியில் கள்ளை விற்க அனுமதிக்க வேண்டும்:  கோவை மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியில் போதை தராத, புளிக்காத, கலப்படம் இல்லாத இயற்கையான கள்ளை விற்க தமிழ்நாடு கள் இயக்கத்துக்கு அனுமதி தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;-<br />
<strong>கள் மீதான தடையை அகற்ற வலியுறுத்தல்</strong></p>
<p>First Published : 07 Feb 2011 09:59:34 AM IST  தினமணி</p>
<p>தாராபுரம், பிப். 6: சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் கள் மீதான தடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.<br />
  தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனைக் கூட்டம், தாராபுரம் அருகேயுள்ள நாராணாபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில அமைப்பாளர் மணி தலைமை வகித்தார்.<br />
  கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, திருஞானசம்பந்தர் அறக்கட்டளைச் செயலர் டாக்டர் ஜெய்லானி, உடுமலை பிரமுகர் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.<br />
  சட்டப்பேரவைத் தேர்தல் அறிவுப்புக்கு முன், கள் இறக்கி, விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;-<br />
<strong>கள் இறக்கிய விவசாயி கைது</strong></p>
<p>First Published : 07 Feb 2011 09:58:52 AM IST  தினமணி</p>
<p>அவிநாசி, பிப். 6: அவிநாசி நம்பியாம்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை கள் இற்க்கிய விவசாயி கைது செய்யப்பட்டார்.<br />
அவிநாசி நம்பியாம்பாளையம் ஊராட்சி சுண்டக்காம்பாளையம் ஓடையத்தோட்டத்தை சேர்ந்த பழனிசாமி (70). இவர் தனது தோட்டத்தில் கள் இறக்குவதாக தகவல் அறிந்த அவிநாசி போலிஸôர் அவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 5 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;<br />
<strong>விவசாயத்தை வீழ்த்திய தொழிற்சாலைகள்!</strong><br />
First Published : 07 Feb 2011 12:00:00 AM IST    தினமணி</p>
<p>கடலூர் உப்பனாற்றங் கரையில் இயற்கை எழிலையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு, அதில் தலைநிமிர்ந்து நிற்கும் சில ரசாயன ஆலைகள். கடலூர் அருகே<br />
கடலூர், பிப். 6: கிழக்குக் கடற்கரை ஓரமாக கடலூர் வழியாக, பரங்கிப்பேட்டை முதல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வரை நீண்டு கிடப்பது பக்கிம்ஹாம் கால்வாய்.<br />
பக்கிம்ஹாம் கால்வாயின் இருபுறமும் பச்சைப் பசேலென காட்சி தந்த வேளாண் பயிர்கள், உடலுக்கும் மனதுக்கும் இதம் தரும் கண்கொள்ளா காட்சி. வானுயர வளர்ந்து நிற்கும் பனை மரங்கள், மாமரங்கள், தென்னை மரங்கள், ஆயிரக்கணக்கான ஏக்கரில் முந்திரிக் காடுகள், சவுக்குத் தோப்புகள், மணிலா, வெட்டிவேர் வயல்கள், கத்தரி, வெங்காயம் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் என்று விரிந்து பரந்து கிடந்த நிலப்பரப்பு இன்று, தொழிற்சாலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு புகை கக்கிக் கொண்டு இருக்கின்றன.<br />
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மரங்கள் வெட்டப்பட்டு, சில கட்டடங்கள் தவிர மற்றபடி, பெரும்பகுதி சுடுகாடாய்க் காட்சி அளிக்கின்றன. வேளாண்மையை அழித்தது மட்டுமன்றி, நச்சு வாயுக்களை பெருமளவுக்கு வெளியேற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்களின் சுகாதாரத்தை பாழ்படுத்தி வருகின்றன.<br />
அன்று வெள்ளைக்காரர்களால் எளிமையான நீர்வழிப் போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்ட பக்கிம்ஹாம் கால்வாய் (உப்பனாறு) இன்று தொழிற்சாலைக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு தகுதியான இடமென மத்திய, மாநில அரசுகள் வகைப்படுத்தி, அங்கு பன்னாட்டு ரசாயனத் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்து வருவது, குதிரை குப்புறத் தள்ளியதுமன்றி குழியும் பறித்த கதையாகி விட்டது.<br />
3 ஆயிரம் ஏக்கரில் சிப்காட் ரசாயனத் தொழிற்பேட்டை, 3 ஆயிரம் ஏக்கரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, 1,400 ஏக்கரில் அனல் மின் நிலையம், 1,000 ஏக்கரில் தனியார் கப்பல் கட்டும் தளம், இன்னும் பெயர் வைக்கப்படாத ஆலைகளுக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள், நல்ல விலை தருவதாகவும், அவர்களின் சந்ததிக்கு வேலை தருவதாகவும், விவசாயிகளிடம் ஆசைகாட்டி பறிக்கப்பட்டுவிட்டன.<br />
விளை நிலங்களை இழந்த, பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், இந்தத் தொழிற்சாலைகளில் நாளொன்றுக்கு ரூ. 60 முதல் ரூ. 80 வரை ஒப்பந்தத் தொழிலாளிகளாக கூலிவேலை பார்க்கும் அவல நிலைக்குத்தான் தள்ளப்பட்டனர். ஆனால் விவசாய நிலங்களை பறித்து அவற்றில் தொடங்கப்பட்ட ஆலைகள், தங்கள் உற்பத்திப் பொருள்களை வெளிநாடுகளில் விற்று, கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றன.<br />
இவற்றுக்கெல்லாம் முன்னதாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் இறால் பண்ணைகளாக மாற்றப்பட்டு, இன்று விதிகளை இறுக்கியதன் காரணமாக, பல இறால் பண்ணைகள் மூடப்பட்டாலும், அவற்றில் மேற்கொண்டு விவசாயம் செய்ய முடியாத பரிதாப நிலைக்கு அந்த நிலங்கள் தள்ளப்பட்டு, சுடுகாடாகக் காட்சி அளிக்கின்றன.<br />
பறிபோனது போக மிச்சம் சொச்சம் இருக்கும் நிலங்களில் இன்றும் பனைமரங்கள், தென்னை மரங்கள், மணிலா, வெட்டிவேர், மலர்ச் செடிகள் பயிரிட்டு நம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் ஏழை விவசாயிகள்.<br />
தியாகவல்லி, நொச்சிக்காடு, நடுத்திட்டு, ராசாப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில், 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட வெட்டிவேர் இன்று, 150 ஏக்கராகச் சுருங்கி விட்டது. ஓராண்டுப் பயிரான வெட்டிவேர் பயிரிடுவதில், ஏக்கருக்கு 4 டன் வெட்டிவேர் கிடைக்கும் என்றும், ஆண்டு வருவாய் ரூ. 2 லட்சம் என்றும் நினைவு கூறுகிறார், தியாகவல்லி விவசாயி சாமிக் கச்சிராயர்.<br />
ஆயிரக்கணக்கான வெட்டிவேர் வயல்களும், சவுக்குத் தோப்புகளும், மணிலா தோட்டங்களும், முந்திரிக் காடுகளும், காய்கறித் தோட்டங்களும் அழிக்கப்பட்டு, அவைகள் நச்சு வாயுக்களை உமிழும் தொழிற்சாலைகளாக மாற்றப்பட்டதுதான் உலகளாவிய புதிய பொருளாதாரக் கொள்கையா என்று வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;<br />
<strong>பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்: ஆவின் பால் விநியோகம் பாதிக்குமா?</strong></p>
<p>First Published : 07 Feb 2011 02:11:46 AM IST   தினமணி</p>
<p>சென்னை, பிப். 6: கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, திங்கள்கிழமை (பிப்ரவரி 7) முதல் பால் உற்பத்தியை நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபடுவதாக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அறிவித்துள்ளன.<br />
 எனினும், சென்னை உள்பட பல்வேறு இடங்களில் ஆவின் பால் விநியோகம் பாதிக்காத வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.<br />
 தமிழகம் முழுவதும் 8,312 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்கள், மாவட்ட ஆவின் ஒன்றியங்கள் மூலம் தினமும் 26 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தினமும் 20 லட்சம் லிடடர் பால் விற்பனை செய்யப்படுகிறது.<br />
 சென்னையில் பால் விநியோகம்: சென்னை மக்களின் தேவைக்காக சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியங்களில் இருந்து பெருமளவு பால் கொள்முதல் செய்யப்படுகிறது.<br />
 அம்பத்தூர், மாதவரம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள பால் பண்ணைகளில் நிலைநிறுத்தப்பட்டு, நகரில் தினமும் 10.30 லட்சம் லிட்டர் பால், விற்பனைக்காக விநியோகிக்கப்படுகிறது.<br />
 இந்த நிலையில், தனியார் நிறுவனங்கள் விநியோகிக்கும் பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டது. இதையடுத்து, பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரினர்.<br />
 இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 5-ம் தேதி பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தியது. இதன்படி பசும்பால் லிட்டருக்கு ரூ.16.64 ஆகவும் (கூடுதலாக ரூ.1.10), எருமைப் பால் லிட்டருக்கு ரூ.25.20 ஆகவும் (கூடுதலாக ரூ.2.20) உயர்த்தப்பட்டது.<br />
 ஆனால், இதில் திருப்தி அடையாத உற்பத்தியாளர்கள், பால் கொள்முதல் விலையை (பசும் பால் லிட்டருக்கு ரூ.5, எருமைப் பால் ரூ.10 வரை) உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்கள் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை (பிப்ரவரி 7) முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன.<br />
 பால் கொள்முதல்- தடுத்தால் கடும் நடவடிக்கை: கடந்த நான்கரை ஆண்டுகளில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு பசுவின் பாலுக்கு கூடுதலாக ரூ.6.60 ஆகவும், எருமைப் பாலுக்கு ரூ.12.70 ஆகவும் அரசு உயர்த்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.<br />
 சட்டப் பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், மீண்டும் கொள்முதல் விலையை உயர்த்தினால், பால் விலை மேலும் உயரக் கூடும். இதனால், பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரும் என அரசு தயக்கம் காட்டி வருகிறது.<br />
 இந்நிலையில், அத்தியாவசியப் பொருளான பால் கொள்முதல் செய்வதைத் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும், சேலம் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<br />
 தென் மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல்: இதையடுத்து, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களில் இருந்து தேவையான அளவு பால் கொள்முதல் செய்ய ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து, சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு வராது என்று ஆவின் நிறுவன வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;<br />
<strong>ஒரு அங்குல நிலம்கூட கொடுக்க மாட்டோம்: போஸ்கோ எதிர்ப்பு இயக்கம் அறிவிப்பு</strong></p>
<p>First Published : 07 Feb 2011 02:17:33 AM IST  தினமணி</p>
<p>பனாஜி, பிப். 6: ஒரிசா மாநிலத்தில் போஸ்கோ எஃகு ஆலை அமைய ஒரு அங்குல நிலம்கூடக் கொடுக்க மாட்டோம் என்று போஸ்கோ எதிர்ப்பு இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.<br />
 மனித உரிமைகள் குறித்தும் ஊழலுக்கு எதிராகவும் கோவா மாநிலம் பனாஜியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று போஸ்கோ பிரதிரோத் சங்கிரம் சமிதியின் தலைவர் அபய் சாஹு பேசியது: &#8220;மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் போஸ்கோ ஆலைக்கு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து போஸ்கோ எதிர்ப்பு இயக்கத்துக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.<br />
 இந்த ஆலையை அமைக்க சுற்றுச் சூழல் அமைச்சகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவை அனைத்தும் வெறும் கண்துடைப்புதான். தென்கொரிய நிறுவனத்துக்காக அரசே மக்களின் மீது அடக்கு முறையை ஏவி விடுகிறது.<br />
 இந்தத் திட்டத்துக்காக மாநில அரசு நில ஆர்ஜிதம் செய்யத் தயாராகி வருகிறது. எனினும் நாங்கள் எக்காரணம் கொண்டும் எங்களது ஒரு அங்குல நிலத்தைக் கூட ஆலை திட்டத்துக்காக வழங்க மாட்டோம்.<br />
 இந்த ஆலை அமைவதை எதிர்த்து கடந்த ஐந்தரை ஆண்டு காலமாக போராடி வருகிறோம். எங்கள் போராட்டத்தை எந்த சூழ்நிலையிலும் கைவிட மாட்டோம்&#8217; என்றார் அவர்.<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;<br />
<strong>கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் இன்று வேலைநிறுத்தம்; மாடுகளுடன் சாலை மறியல் </strong><br />
Chennai திங்கட்கிழமை, பெப்ரவரி 07, 11:36 AM IST </p>
<p>முந்தைய பதிவுகள் 3    மாலைமலர்</p>
<p> இமெயில்  பிரதி </p>
<p>சென்னை, பிப்.7-</p>
<p>தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் பசுப்பாலுக்கு ரூ.5, எருமைப் பாலுக்கு ரூ.5 கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், பால் சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் இன்று ஈடுபட்டனர். கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்காமல் அவற்றை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தினார்கள்.</p>
<p>சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு சங்கங்களுக்கு பால் ஊற்றவில்லை. மதுரை மாவட்டத்தில் நடந்த போராட்டத்தின்போது விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   சேலம்-நாமக்கல் மாவட்டங்களில் ஸ்டிரைக்கால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பால் உற்பத்தியாளர் வேலை நிறுத்தத்தால் ஆலைக்கு பால் கொள்முதல் அளவு குறைந்தது. ஒருசிலர் மட்டுமே சொசைட்டிக்கு பாலை ஊற்றியதால் மிக குறைந்த அளவில் பால் கொள்முதல் செய்யப்பட்டன. </p>
<p>போலீஸ் பாதுகாப்புடன் ஆவினுக்கு பால் கொண்டு செல்லப்பட்டது.   நீலகிரி மாவட்டத்திலும் பால் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் பால் ஊற்றவில்லை. மேலும் கோரிக்கையை வலியுறுத்தி பேரணி நடத்தினர். சேலம் மாவட்டம் ஆத்தூரில் விவசாயிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் பால் சங்கங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பாலை தரையில் ஊற்றி னர். போராட்டம் குறித்து பால் உற்பத்தியாளர் நல சங்க மாநில தலைவர் செங்கோட்டுவேல் கூறுகையில், வேலை நிறுத்த போராட்டம் அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. 80 சதவீத விவசாயிகள் சொசைட்டிகளுக்கு பால் வழங்கவில்லை.</p>
<p>பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி உள்ளனர். அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றார்.   தினமும் 20 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 10 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு மட்டும் வினியோகிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களுக்கு 10 லட்சம் லிட்டர் பால் வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர் போராட்டத்தால் சென்னை நீங்கலாக ஒருசில மாவட்டங்களில் பால் வினியோகம் இன்று சற்று பாதித்தது. </p>
<p>சென்னையில் வழக்கம் போல இன்று பால் சப்ளை செய்யப்பட்டது. இன்று கொள்முதல் செய்யப்படும் குளிரூட்டும் நிலையங்களில் பதப்படுத்தி பின்னர் சென்னைக்கு கொண்டு வரப்படும். நேற்றைய பால் இன்று தடையின்றி வினியோகம் செய்யப்பட்டது. சென்னையில் பால் தட்டுப்பாடு இன்று ஏற்படவில்லை. நாளை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து ஆவின் அதிகாரி கூறும்போது, பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் பால் வினியோகம் இன்று பாதிக்காது. இதனுடைய பாதிப்பு நாளைதான் தெரியும். </p>
<p>பால் எந்த அளவிற்கு கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது என்ற விவரமும் பிற்பகல் தெரியும். சென்னையில் பால் தட்டுப்பாடு ஏற்படாமல் வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து பால் கொண்டு வரப்படுகிறது. மாநிலத்தின் மொத்த பால் உற்பத்தியில் 50 சதவீதம் சென்னை மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. </p>
<p>இவ்வாறு அவர் கூறினார்.<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;-<br />
<strong>சட்டசபை வளாகத்தில் கள் விற்பனை தமிழ்நாடு கள் இயக்கம் முடிவு</strong><br />
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011,00:56 IST    தினமலர்<br />
கோவை: &#8220;தமிழக சட்டசபை வளாகத்தில் வரும் 10ம் தேதி கள் விற்பனை உறுதியாக நடக்கும்&#8217; என, &#8220;தமிழ்நாடு கள் இயக்க&#8217; ஆலோசனை கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு கள் இயக்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கள் இறக்குவதும்,பருகுவதும் அரசியல் சட்டம் மக்களுக்கு கொடுத்துள்ள உணவு தேடும் உரிமை. 108 நாடுகளில் கள் இறக்கவும், பருகவும் தடையில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் 23 ஆண்டுகளாக தடை நீடிக்கிறது. இத்தடையை தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும். தமிழக பட்ஜெட்டில் கள் இறக்கி விற்பது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. கள் இயக்கத்தின் கோரிக்கை உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதால், பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில் சட்டசபை வளாகத்தில், தமிழ்நாடு கள் இயக்கம் கள் விற்பனை செய்யும். தமிழ்நாடு கள் இயக்கத்தின் கொங்கு மண்டல அமைப்பாளர் ராமசாமி, வரும் 10ம் தேதி சுவைநீர்(கள்) விற்பனையை மேற்கொள்வார். இவ்வாறு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, மாநில அமைப்பாளர் கதிரேசன், பனை, தென்னை தொழிலாளர் சங்க மாநிலத் துணைத்தலைவர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;<br />
<strong>பொதுவேட்பாளரை நிறுத்த விவசாயிகள் சங்கம் முடிவு</strong><br />
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2011,02:18 IST    தினமலர்<br />
திருப்பூர் : விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண, தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.</p>
<p>கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: நொய்யலில் கலக்கும் சாயக்கழிவால் நிலம் பாதிக்கப்பட்டு சொந்த ஊரிலேயே விவசாயிகள் அகதிகளாக உள்ளனர். சுத்திகரிப்பு நிலையங்கள் முறையாக செயல்படுவதில்லை. இரவு நேரத்தில் சாயக்கழிவுகள் நொய்யலில் விடப்படுகிறது. திருப்பூர் தவிர கோவையிலிருந்தும் சாயக்கழிவு நொய்யலில் கலக்கிறது;20 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம், பல லட்சம் தொழிலாளர் பிரச்னை மேலும் விவசாயிகள் நலன் கருதி மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சாயக்கழிவு கடலில் கொண்டு சேர்ப்பது சாத்தியமானது.</p>
<p>&#8220;கள்&#8217; இறக்கும் பிரச்னையில் விவசாயிகளின் போராட்டம் தொடரும்; பாலுக்கு உரிய விலை கொடுக்காமல், அரசு நிறுவனங்களை முடக்கி, தனியார் நிறுவனங்களை அரசு வளர்க்கிறது. வரும் 7ம் தேதி முதல் மாடுகளுக்கு உரிய தீவனம் வழங்காமல், பால் உற்பத்தியைக் குறைத்து, போராட்டம் நடத்தப்படும். சாய ஆலைப் பிரச்னை, &#8220;கள்&#8217; பிரச்னை, பாலுக்கு உரிய விலை உள்ளிட்ட விவசாயிகள் பிரச்னைகளை முன்வைத்து வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து விவசாயிகள் அமைப்பு சார்பில் ஒரு தொகுதியில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவார்; அதுகுறித்து ஆலோசிக்கப்படுகிறது, என்றார்.<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;<br />
<strong>சாயக்கழிவை கடலில் சேர்ப்பது எளிதல்ல</strong> : செல்லமுத்து சொல்கிறார்<br />
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2011,02:14 IST   தினமலர்<br />
திருப்பூர் : சாயக்கழிவை கடலில் கொண்டு சேர்ப்பது எளிதல்ல. தங்களது வருவாயில் ஒரு சதவீதத்தை செலவிட்டால் சாயப்பட்டறைகளே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என, உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து தெரிவித்தார்.</p>
<p>மாநில தென்னை வாரிய தலைவரும், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவருமான செல்லமுத்து கூறியதாவது: கோவை, உடுமலையில் சினிமா செட் போட்டதால் குடிநீர் மாசுபட்டது. திருப்பூரில் சாயப் பட்டறைகளால் நொய்யல் நீர் மாசுபட்டுள்ளது. 30 ஆண்டுகளாக சாயக்கழிவால் நீர், மண், கால்நடை, விவசாயம் மற்றும் மனிதர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோர்ட் உத்தரவால் தற்போது பலன் கிடைத்துள்ளது. நான்கு லட்சம் தொழிலாளர்கள் குறித்து கவலைப்படுவோர் பல லட்சம் மக்கள் நலன் பற்றி கவலைப்படவில்லை. சாய ஆலைகள் தங்கள் வருவாயில் ஒரு சதவீதம் செலவிட்டால் போதும். இதற்கு அரசு உதவி தேவையில்லை. </p>
<p>சாயக்கழிவை கடலில் சேர்ப்பது எளிதல்ல; உடனே செய்து முடிக்கும் பணியும் அல்ல. இப்பிரச்னைக்கு தீர்வு காண விவசாயிகள், சாய ஆலைகள் மற்றும் அரசு அதிகாரிகள் கொண்ட முத்தரப்பு கமிட்டி அமைத்து, இரு தரப்பும் பாதிக்காத வகையில் ஒரு தீர்வு முடிவு செய்து, அதைக் கோர்ட்டில் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கலாம். வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் உ.உ.க., உள்ளது; ஆறு தொகுதிகளை கேட்க உள்ளோம். &#8220;கள்&#8217; குறிப்பிட்ட அளவு மரங்களில் இறக்க அனுமதிக்கலாம். இதற்கு உரிய வரி விதிப்பு செய்யலாம்.</p>
<p>&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;<br />
<strong>சட்டசபைக்குள் கள் விற்பனை : கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை</strong><br />
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2011,00:32 IST  தினமலர்<br />
திருப்பூர் : &#8220;&#8221;இன்று துவங்கும் சட்டசபை கூட்டத் தொடர் முடிவில், கள் இறக்க அனுமதி வழங்கவில்லை எனில், சட்டசபைக்குள் நுழைந்து கள் விற்போம்,&#8221; என, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார். திருப்பூரில், நிருபர்களிடம் கூறியதாவது: கள் இறக்குவது, அடுத்த கட்டப் போராட்டங்கள் குறித்த முடிவை அறிவிக்க, நிருபர்கள் சந்திப்பு கூட்டத்துக்கு, ஈரோட்டில் ஏற்பாடு செய்திருந்தோம்; போலீசார் அத்துமீறி என்னை கைது செய்தது, கண்டனத்துக்குரியது. கள் இறக்கியவர்கள் மீது, கோவை மாவட்டத்தில் மட்டுமே, போலீசாரால் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. கள் பானைகளை உடைத்து, விவசாயிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதைக் கண்டித்து, கள் இயக்கத்தினர், கோவை கண்ணம்பாளையத்தில், கடந்த 1ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்; வழக்குகளை திரும்பப் பெறும் வரை, உண்ணாவிரதம் தொடரும். கள் இறக்குவோரை, &#8220;கொசுக்களை நசுக்குவதை போல் நசுக்குவோம்&#8217; என, மேற்கு மண்டல ஐ.ஜி., தெரிவித்து, விவசாயிகளை அவமானப்படுத்தி உள்ளார்.</p>
<p>கள் இயக்கத்துடன், மேற்கு மண்டல ஐ.ஜி., பேச்சு நடத்த வேண்டும்; அவர் தரப்பு நியாயத்தை நிலை நாட்டினால், எங்கள் கோரிக்கை மற்றும் போராட்டத்தை கைவிடுகிறோம். அவர் மட்டுமின்றி, வேறு யாரும், &#8220;ஆல்கஹால் கலந்த மதுபானத்தை போன்று, கள் ஒரு மதுபானம் தான்; உணவுப் பொருள் அல்ல&#8217; என நிரூபித்தால், போராட்டத்தை கைவிட தயார்.</p>
<p>சட்டசபை கூட்டத் தொடரில், நல்ல முடிவை அறிவிக்காமல், கள் இயக்கத்தை ஏமாற்றினால், கூட்டத்தொடர் முடியும் நாளில், சட்டசபைக்குள் கள் விற்பனை செய்வோம்; அதற்காக, சென்னை மாநகராட்சி போலீசாரிடம் அனுமதியும் பெற உள்ளோம். அறிவிப்பு வெளியிடாமல், அடுத்தகட்ட தேர்தலுக்கு தி.மு.க., தயாரானால், தி.மு.க., தலைவர் கருணாநிதி எங்கு போட்டியிட்டாலும், அவரை தோற்கடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம்.இவ்வாறு, நல்லசாமி தெரிவித்தார்.</p>
<p>&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;<br />
<strong>பேரவை கூட்டத் தொடர் இறுதி நாளில் சுவைநீர் விற்பனை</strong></p>
<p>First Published : 04 Feb 2011 09:44:51 AM IST   தினமணி</p>
<p>திருப்பூர், பிப்.3:  தமிழகத்தில் கள் இறக்கி விற்க சட்டப் பேரவைக் கூட்டத்தில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படாதபட்சத்தில் இறுதி நாள் கூட்டத்தில் சுவைநீர் விற்பனை செய்யப்படும். அதற்கான போலீஸ் அனுமதி பெறப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு கள் இயக்கம் தெரிவித்துள்ளது.<br />
இது குறித்து அவ்வியக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி திருப்பூரில் செய்தியாளர் களிடம் கூறியது: தமிழகத்தில் கள் இறக்கி விற்க தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. தவிர, கள் இறக்க அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீதும் பல்வேறு குற்ற நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன. அதன்படி, கோவை மாவட்டத்தில் கள் இறக்கியோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்ணம்பாளையத்தில் கள் இயக்கம் துவங்கியுள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் வழக்கை திரும்பப் பெரும் வரை தொடரும்.<br />
கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்கிடக்கோரி தமிழ்நாடு கள் இயக்கம் கடந்த 6 ஆண்டாக போராடி வருகிறது. அதனடிப்படையில், வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கள் இறக்கி விற்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறான அறிவிப்பு வராதபட்சத்தில் கூட்டத் தொடரின் இறுதி நாளில் சட்டப் பேரவையில் சுவை நீர் (புளிக்காத கள்) விற்பனை செய்யப்படும். அதற்கு, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. தவிர, வரும் சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் கருணாநிதி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து கள் இயக்கம் பிரசாரத்தில் ஈடுபட்ட தோற்கடிப்போம்.<br />
கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் உரையில் அனைத்து காதி கிராம தொழிற்சங்கங்களிலும் பனை, தென்னையிலிருந்து பெறப்பட்ட சுவை நீர் விற்கப்படும் என்று கூறப்பட்டது. அந்த சுவை நீர் என்ன என்பதை அரசு விளக்கமளிக்க வேண்டும். துவக்கத்தில் கள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து கொமுக போராட்டத்தில் பங்கெடுத்தது. தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணியை எதிர்பார்த்து கள் இயக்கத்துக்கான ஆதரவிலிருந்து பின் வாங்கியுள்ளது என்றார்.</p>
<p>&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;-<br />
   <strong>கள் இயக்கம் தொடர் உண்ணாவிரதம் </strong></p>
<p>  கள் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் நுகர்வோர்கள்  மீதான பொய்வழக்கு போடுதல் போன்ற அடக்கு முறையை கண்டித்தும், கள் இயக்க கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டியும்  1.2.2011  முதல்  தொடர் உண்ணாவிரத அறப்போராட்டம்.<br />
 இடம் &#8211; கண்ணம்பாளையம் . திருச்சி சாலை, கோயமுத்தூர்.<br />
   கலந்துகொண்டோர் &#8211;            உழவர் காவலன்<br />
  N.S.பழனிசாமி M.A. Ex. M.L.A.,<br />
தலைவர். கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்.<br />
   வழக்கறிஞர் செ.நல்லசாமி M.A.B.L.<br />
தமிழ்நாடு கள்இயக்க ஒருங்கிணைப்பாளர்.<br />
 உடுமலை வேலாயுதம்  B.Sc (Ag)  தலைவர், தமிழ்நாடு விவசாய விழிப்புணர்வு இயக்கம்.<br />
மருத்துவர்.தங்கராஜ். M.B.B.S. DCH.<br />
கோவைமாநகர் மாவட்டத்தலைவர்<br />
K.K.சந்திரசேகர்<br />
கோவை மாவட்ட இளைஞர் அணித்தலைவர்<br />
பூராண்டாம்பாளையம்.  மணி<br />
மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர்<br />
வேலுசாமி அவினாசி<br />
K.P.சண்முகசுந்தரம்<br />
திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கத்தலைவர்<br />
C.P.ஈஸ்வரன்<br />
திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கசெயலாளர்<br />
R. திருஞானசம்பந்தம்  வழக்கறிஞர்<br />
R. லட்சுமி நாராயணன் வழக்கறிஞர்<br />
M.செல்வராஜ்  தலைவர் சட்ட விழிப்புணர்வு இயக்கம்.<br />
கானூர் அருணாசலம்.<br />
மற்றும்   60 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.<br />
1.2.2011<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;<br />
கோயம்புத்தூர்<br />
<strong>கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்: 66 பேர் கைது</strong><br />
First Published : 01 Feb 2011 10:34:43 AM IST   தினமணி</p>
<p>கோவை, ஜன. 31: கள் இறக்கும் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்யக் கோரி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 66 பேர் கைதுசெய்யப்பட்டனர்.<br />
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறை<br />
தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கள் இயக்கத்தை சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.<br />
கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுவதைக் கண்டித்தும், சிறையில் அடைக்கப்பட்ட விவசாயிகள், மரம் ஏறும் தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர் .<br />
கள் இயக்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஏ.கே.சண்முகத்தை கைது செய்து சிறையில் அடைத்ததால், அவர் உண்ணாவிதரம் இருக்கிறார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.<br />
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 66 பேரை ரேஸ்கோர்ஸ் போலீஸôர் கைது செய்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.</p>
<p>&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;<br />
<strong>லாபமற்ற தொழிலாகிறது விவசாயம்:வேளாண் துறை செயலர் கவலை</strong></p>
<p>கோவை: &#8220;&#8221;விவசாயம் லாபமற்ற தொழிலாக மாறிவருகிறது. பெரும்பாலான விவசாயிகள், விவசாயத்தை விட்டு வெளியேறிவிட்டனர்,&#8221; என, மத்திய வேளாண் துறை முதன்மை செயலர் ராம மோகன் ராவ் பேசினார். தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்கும், வேளாண் உயிரி தொழில் நுட்ப மாநாடு நேற்று துவங்கியது. மத்திய வேளாண் துறை முதன்மை செயலர் ராம மோகன் ராவ் பேசியதாவது: நம்நாட்டில் பயிர் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது. சாகுபடி வளங்களும் வேளாண் உற்பத்தியும் குறைந்துள்ளது. இதை சரிப்படுத்த வேளாண் தொழில்நுட் பம் அவசியம். உற்பத்தியை பல மடங்கு பெருக்குவதற்கும், உயிரியியல் தொழில்நுட்ப முறைகளை பெருக்குவது அவசியம். தமிழகம் நீர் பற்றாக்குறை உடைய மாநிலம். ஆறுகளின் வாயிலாக கிடைக்கும் நீர் வரத்து மிகக்குறைவு. தமிழகத்தில் நிலத்தடி நீரை 90 சதவீதத்துக்கும் அதிகமாக பயன்படுத்தி விட்டோம். நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. நிலப்பரப்பில் 50 சதவீத அளவுக்கு மட்டுமே பாசன வசதியுடன் உள்ளது. 50 சதவீத பகுதி பாசன வசதி இல்லாமல் உள்ளது. இத்தருணத்தில் நாம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதற்குரிய தொழில்நுட்பத்தை பயன் படுத்திக்கொள்ள வேண்டும். வறட்சி மற்றும் வெள்ளம் போன்றவற்றை தாங்கி வளரும் புதிய வகையிலான பயிர் ரகங்கள் நமக்கு தேவைப்படுகிறது. புதிய ரகங்களை உருவாக்குவது, தரமான விதைகளை உயிரி தொழில் நுட்பத்தை பின்பற்றி உற்பத்தி செய்ய வேண்டும். பாரம்பரிய பயிர் ரகங்கள் வறட்சி, பூச்சிநோய் தொல்லைகளை தாங்கி வளர் பவை. அவை மறைந்து வருகின்றன. தற்போது ஒரு சில ரகங்கள் கூட புழக்கத்தில் இல்லை. பாரம்பரிய பயிர் களை, நல்ல குணாதிசியங்களை கொண்ட உயிரி தொழில்நுட்பம் மூலம் நாம் உற்பத்தி செய்யலாம். அதன் மூலம் உயர்விளைச்சளை கொடுக்கும் வீரிய ஒட்டு ரகங்களை உருவாக்க வேண்டும். விவசாயம் லாபமற்ற தொழிலாக மாறிவருகிறது. பெரும்பாலான விவசாயிகள், விவசாயத்தை விட்டு வெளியேறிவிட்டனர். அதனால் நிறைய விவசாய நிலம் தரிசாகவே உள்ளது. 40 வயதுடைய இளம் விவசாயிகளை காண முடிவதில்லை. பெரும்பாலான இளைஞர்கள் விவசாய தொழில் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் விவசாயம் லாபகரமான தொழிலாக மாறவேண்டும். உயிரியியல் தொழில்நுட்பம் உதவ வேண்டும்.விவசாயத்தில் தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும். அதற்கு உயிரி தொழில் நுட்பம் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, மத்திய வேளாண் துறை முதன்மை செயலர் ராம மோகன் ராவ் பேசினார். இம்மாநாடு தொடர்ந்து இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் வேளாண் பல்கலை துணை வேந்தர் முருகேசபூபதி, அமெரிக்காவிலுள்ள எம்.ஐ.பி.ஆர்.டி., அமைப்பு தலைவர் ராஜன்நடராஜன், ஐதராபாத்திலுள்ள சர்வதேச மிதவெப்ப பகுதிக்கான பயிர் ஆராய்ச்சி நிறுவன தலைமை செயல் அதிகாரி கிரிசர்மா உள்ளிட்ட ஆறு பேருக்கு வேளாண் வளர்ச்சிப்பணியில் தொலைநோக்குப்பார்வையில் சிறந்த தலைமையாக செயல்பட்டதற்காக எம்.ஐ.பி. ஆர்.டி., விருதுகள் வழங்கப்பட்டது.</p>
<p>தினமலர்&#8211;31.1.2011<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;<br />
                        <strong>கள் இறக்கிய மூவர் கைது</strong></p>
<p>பல்லடம் : பல்லடம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தைச் சேர்ந்த சுந்தரரங்கசாமி (30), ஈஸ்வரமூர்த்தி(35). மரம் ஏறும் தொழிலாளி பாபு (40) ஆகியோர் தென்னை மரத்தில் இருந்து &#8220;கள்&#8217; இறக்கி விற்றதாக, பொள்ளாச்சி மதுவிலக்கு போலீசார் நேற்று கைது செய்தனர். அப்பகுதி விவசாயிகள் போலீசாரிடம் கடும் எதிர்ப்பு தெரிவித் தனர். இருப்பினும் அம்மூவரையும் மதுவிலக்கு போலீசார் பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் உடனடியாக கோர்ட் ஜாமீனில் வெளியே வந்தனர்.<br />
தினமலர் &#8211;30.1.2011 </p>
<p>&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;<br />
<strong></strong> தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்</p>
<p>   உடுமலை : மக்காச்சோள விலை வீழ்ச்சியை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், உடுமலை ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மக்காச்சோள சாகுபடியில், செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது. அறுவடை சமயத்தில் விலை குறைவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்; குவிண்டாலுக்கு 1,500 ரூபாய் விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் பாதிப்பதை தடுக்க, பால் லிட்டருக்கு 22 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தாலுகா தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். தாலுகா கமிட்டி உறுப்பினர் விஜயகுமார் நன்றி தெரிவித்தார்.<br />
தினமலர்&#8211;28.1.11<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;<br />
ஒரு மடை விட்டு ஒரு மடை தண்ணீர் திட்டம்; மாற்றியமைக்க ஆலோசனை</p>
<p>   பொங்கலூர் : பி.ஏ.பி., திட்டத்தில் ஒரு மடை விட்டு ஒரு மடை தண்ணீர் வழங்கும் திட்டத்தை மாற்றி அமைக்க, விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம், பொங்கலூர் பி.ஏ.பி., விருந்தினர் மாளிகையில் நேற்று நடந்தது. பொள்ளாச்சி செயற்பொறியாளர் தங்கவேல் தலைமை வகித்தார். பொங்கலூர் உதவி செயற்பொறியாளர் முருகேஷ் வரவேற்றார். பல்லடம் பகிர்மானக்குழு தலைவர் சாமியப்பன், பொங்கலூர் பகிர்மானக்குழு தலைவர் கோபால் முன்னிலை வகித்தனர். பங்கேற்ற விவசாயிகளில் பலரும், &#8220;மதகுகளில் குறைந்தளவு தண்ணீர் வருகிறது. தண்ணீர் வரும் குழாய்களை மாற்ற வேண்டும். மெயின் கால்வாயில் இருந்து அதிகமாக தண்ணீர் எடுக்க வேண்டும். மொத்த பகுதிக்கும் சொட்டு நீர் பாசனம் அமைத்து ஆண்டு முழுவதும் தண்ணீர் விட வேண்டும்,&#8217; என்றனர். பாசன சபை தலைவர்கள் கூறுகையில், &#8220;உதவி செயற்பொறியாளரிடம் மட்டுமே தண்ணீர் அளவை அதிகரிக்குமாறு கேட்போம். அவரே முழு பொறுப்பேற்க வேண்டும். கால்வாய்களை பராமரிக்க பாசன சபைக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும்; காண்டூர் கால்வாயை சர்வதேச தரத்தில் அமைக்க வேண்டும்; 400 ஏக்கர் வரையுள்ள பகுதிக்கு ஒரு மடை விட்டு ஒரு மடை பாசனம் வழங்க வேண்டும். விவசாய வேலைக்கு நூறு நாள் வேலை திட்ட பயனாளிகளை பயன்படுத்த வேண்டும்,&#8217; என்றனர். திட்டக்குழு தலைவர் பரமசிவம் பேசியதாவது:தமிழகத்தில் ஒன்பது திட்டக்குழுக்கள் உள்ளன; பி.ஏ.பி., திட்டக்குழுவை உலக வங்கி பாராட்டியுள்ளது. திட்டக்குழுவின் கீழ் பகிர்மானக்குழு, பாசனக்குழுக்குள் செயல்படுகின்றன. கடந்த காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது, ஒரு மடை விட்டு ஒரு மடை தண்ணீர் விடுமாறு கேட்டோம். அரசு பரிசீலனையில், 1,000 ஏக்கருக்கு அதிகம் இருக்கும் பகுதியில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது 400 ஏக்கர் வரை உள்ள பகுதிக்கு ஒரு மடை விட்டு ஒரு மடை தண்ணீர் விடுமாறு கேட்கிறோம். இத்திட்டத்தை கொண்டு வந்தால், சிறப்பாக செயல்படுத்த முடியும். ஒவ்வொரு ஆண்டும் 130 கி.மீ., தூரம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, இரண்டு லட்சம் ஏக்கர் பாசனம் செய்யப்படுகிறது. பி.ஏ.பி., திட்டம் பாத்தி கட்டி, வாய்க்கால் மூலம் நீர் பாய்ச்ச அமைக்கப்பட்டது. நம்மால் அவ்வாறு செய்ய முடிவதில்லை. இதனால், தண்ணீர் பற்றாக்குறை உள்ளது, என்றார். பொள்ளாச்சி செயற்பொறியாளர் தங்கவேல் பேசுகையில், &#8220;&#8221;தற்போதைய ஐந்து சுற்று பாசன முறையில் 90 சதவீதம் நன்றாக உள்ளது. ஒரு மடை விட்டு ஒரு மடை விடும் பாசன திட்டத்தை, 1,000 ஏக்கரில் இருந்து 400 ஏக்கராக மாற்றுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்புகிறோம். மக்கள் சில இடங்களில் வாய்க்காலை திறந்தவெளி கழிப்பிடமாகவே பயன்படுத்துகின்றனர். தண்ணீர் வராதபோது யாரும் கண்டுகொள்வதில்லை. வாய்க்காலை பாதுகாக்க வேண்டும்,&#8221; என்றார். சுல்தான் பேட்டை பகிர்மானக்குழு தலைவர் ராஜகோபால், உடுமலை செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி, பாசன சபை தலைவர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.<br />
தினமலர்&#8211;28.1.11<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;<br />
உழவர் காவலன்    N.S.பழனிசாமி M.A. Ex. M.L.A.,     &#8212; அறிவிப்பு </p>
<p>        உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு  அவர்களின் 88 வது பிறந்த தினம் 6.2.2011   ஞாயிறு    காலை   10.௦௦௦00  மணியளவில் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் .<br />
                  முழு விவரம்  &#8211;உழவர் காவலன்  N.S.பழனிசாமி M.A. Ex. M.L.A.,  -ல் உள்ளது .<br />
22.1.2011<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;<br />
<strong>கள் விற்பனை மையங்களை அமைக்க வேண்டும் &#8211;  சரத்குமார்</strong></h3>
<p>ஈரோடு, ஜன. 21: கள்ளை கொள்முதல் செய்து, விற்பனை செய்ய அரசே மையங்களை அமைக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்தார்.</p>
<p>கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற கள் இறக்கும் போராட்டதுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஈரோடு மாவட்டம், அரச்சலூருக்கு வெள்ளிக்கிழமை வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:</p>
<p>1967-ல் அண்ணா முதல்வராகப் பதவி ஏற்றபோது, &#8220;பூரண மதுவிலக்குதான் எங்கள் கொள்கை. மதுக் கடைகளை திறந்தால்தான் அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்றால், எனக்கு இந்தப் பதவி தேவையில்லை&#8217;என்றார்.</p>
<p>ஆனால், தற்போது அரசே மதுக் கடைகளை நடத்துகிறது. அங்கு பல வகையான மது விற்கப்படுகிறது. அந்த மது வகைகளை விட, கள்ளில் குறைந்த அளவுதான் ஆல்கஹால் உள்ளது.</p>
<p>பால் கொள்முதல் செய்ய கூட்டுறவு சங்கங்களை அமைத்துள்ளதுபோல், கள் கொள்முதல் மையத்தை ஏற்படுத்தி, டின் மற்றும் கேன்களில் அடைத்து கள்ளை விற்பனை செய்ய வேண்டும்.</p>
<p>கள் இறக்க அனுமதி வழங்கினால் தென்னை மற்றும் பனை மரம் ஏறும் 10 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் குடும்பங்கள் வளம் பெறும்.</p>
<p>பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை, கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும்.  மதுக் கடைகளை மூடினால் கள்ளச் சாராய விற்பனை அதிகரித்துவிடும் என்று கூறுவதை ஏற்க முடியாது. அரசால் எதையும் கட்டுப்படுத்த முடியும்.</p>
<p>22.1.2011 &#8211; தினமணி<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;</p>
<h2><strong>தடையை மீறி இன்று கள் விற்பனை</strong></h2>
<p>ஈரோடு: &#8220;&#8221;அறச்சலூரில் இன்று திட்டமிட்டபடி கள் விற்பனை துவங்கும்,&#8221; என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.<br />
அவர் கூறியதாவது: தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு சட்டம் இல்லை. இங்கு அறிவியல் பூர்வமான ஊழல்தான் செய்கின்றனர். இட்லி, தோசையில் கூட மூன்று முதல் நான்கு சதவீதம் ஆல்கஹால் உள்ளது. பழங்காலத்தில் தினையிலிருந்து கள் எடுத்தனர். கள் இறக்குவதும், விற்பதும் உணவு தேடும் உரிமை, இச்சட்டத்தின்படி, அரச்சலூரில் இன்று நடக்கும் கள் இறக்கி விற்பனை துவங்கும்.</p>
<p>கள் விற்பனை துவக்க விழாவுக்கு பாதுகாப்பு கேட்டு, ஜனவரி 21ம் தேதி, எஸ்.பி., ஜெயச்சந்திரனுக்கு கடிதம் அனுப்பினேன். இதற்கு பதிலனுப்பிய எஸ்.பி., &#8220;தமிழக மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு மற்றும் உட்பிரிவு (1-டி), (ஈ)ன்படி, யாரேனும் கள் இறக்கினாலோ அல்லது தன் வசம் கள் வைத்திருந்தாலோ அது தண்டனைக்குரியது. இந்திய காவல் சட்டம் 1861, பிரிவு 30(2)ன் சரத்துக்கள் பெருந்துறை காவல் உட்கோட்டப்பகுதியில் தற்போது, அமலில் உள்ளது. தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937க்கு முரண்பாடானது என்பதால், கள் இறக்கி விற்க பல்வேறு தரப்பினர் அறச்சலூரில் 21ம் தேதி ஒன்று திரண்டாலும் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போராட்டத்துக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்க இயலாது&#8217; என, கூறியுள்ளார்.</p>
<p>நாங்கள் போராட்டத்துக்கு அனுமதி கேட்கவில்லை; அதிக மக்கள் கூட்டம் வருவர் என்பதால், பாதுகாப்புதான் கேட்டோம். நாங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம். போலீஸார் கைது செய்தாலும் போராட்டத்தை நடத்துவோம். சென்னை வந்த ராகுல்காந்தியை சந்தித்து, இப்பிரச்னை குறித்து கூறினோம். அவரும் சம்மதித்து, மத்திய அமைச்சர் ஒருவரை அனுப்புவதாக கூறினார். ஆனால் அதன் பின் தகவல் ஏதும் இல்லை. அறச்சலூரில் இன்று காலை 10.30க்கு கள் விற்பனை துவக்கப்படுகிறது. ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, பா.ஜ., கோவை முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், எம்.எல்.ஏ., வசந்தகுமார், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் உள்பட பலர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.</p>
<p>தினமலர்- 21.1.2011<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;<br />
<strong><span style="color:#800080;">10 ஆண்டுகளில் விவசாயத்தை கை கழுவியவர்கள் 70 லட்சம் பேர்</span></strong></p>
<p>விவசாய தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, மழை வெள்ளம், வறட்சி போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் கொடுத்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் 70 லட்சம் பேர் விவசாய தொழிலை விட்டு, வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டதாகவும், கடன் தொல்லையால் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில், இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>நாட்டில் உள்ள 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களையே நம்பி உள்ளனர். இதனாலேயே, சுதந்திரம் அடைந்ததில் இருந்து, விவசாய தொழிலை முன்னேற்ற ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டங்களிலும், மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது.மாநில அரசுகளும், விவசாயிகளுக்கு பயிர் செய்யவும், உழவு கருவிகள் வாங்கவும் கடன் உதவிகளை வழங்கி வருகின்றன. உரம், பூச்சி மருந்து பொருட்கள் மானிய விலையில் கொடுக்கின்றன. வெள்ளம், வறட்சி போன்ற காலங்களில் கடன் ரத்து செய்யப்படுகின்றன.கடன் உதவிகள், மானியம் போன்றவை கிடைத்தாலும் விவசாயம் செய்வது எளிதான செயலாக இல்லை. எதிர்பாராமல் திடீரென பெய்யும் பெரும் மழை, பயிர் செய்ய முடியாத அளவிற்கு கடும் வறட்சி, பனி போன்றவை விவசாயிகளை அவ்வப்போது பதம்பார்த்து வருகின்றன. இதனால், இந்த ஆண்டு சிறப்பான மகசூல் கிடைக்கும் என்று, எந்த விவசாயியும் எதிர்பார்ப்புடன் இருக்க முடியாத நிலை உள்ளது.</p>
<p>இதனால், வாங்கிய கடனையும் சரியான தவணைகளில் கட்ட முடிவதில்லை. விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கினாலும், அதை பெறுவதற்கு சிபாரிசு, கடன் வழங்கும் அதிகாரிக்கு லஞ்சம் என்று கொடுக்க வேண்டியுள்ளதால், கடன் தொகை முழுவதும் விவசாயிக்கு கிடைக்க முடியாத நிலை உள்ளது.இதனால், தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டியுள்ளது. கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும், கடன் சுமை அதிகரித்து ஏராளமான விவசாயிகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.கடன் தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கடனை கட்ட முடியாமல் தன்மானம், கவுரவம் கருதி தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்திற்கும் அதிகம்.விவசாய தொழிலில் கூலி குறைவாக இருப்பதால், கடந்த 10 ஆண்டுகளில் 70 லட்சம் பேர் விவசாயத்தை கைவிட்டு, வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர்.</p>
<p>இது குறித்து விவசாய சங்கங்களை சேர்ந்தவர்களை கேட்டபோது, &#8220;விவசாய பட்டப்படிப்பு படித்து வேலை இல்லாத விவசாய பட்டதாரிகளை கிராமங்களுக்கு அனுப்பி, விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நவீன விவசாய தொழில் முன்னேற்றங்கள் குறித்து, விவசாயிகளிடம் எடுத்துக்கூறி விவசாயத்தை வளர்க்க அரசு உதவ வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில், உலகில் விவசாய உற்பத்தி குறையும் என்று வல்லுனர்கள் மதிப்பிட்டுள்ளனர்.கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணாக வெங்காயம், தக்காளி போன்ற பொருட்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து விட்டன. இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.</p>
<p><strong>&#8220;கடன் தள்ளுபடி&#8217; திட்டம் கண்துடைப்பு</strong> : மத்திய, மாநில அரசுகள் விவசாய கடனை தள்ளுபடி செய்து வந்தாலும் அதன் பலன், ஏராளமான ஏழை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. கடன் தள்ளுபடியை விட, பயிர் காப்பீடு திட்டத்தை அதிகரித்தால் பலன் கிடைக்கும். இந்த திட்டம் வெகுவாக நடைமுறையில் இல்லாததால், அதிக மழை, வறட்சி, பனிப்பொழிவு, புயல், பூச்சி தாக்குதல், நோய் போன்ற காரணங்களால் நஷ்டம் ஏற்பட்டு, விவசாய தொழில் முடங்கிப் போய் விடுகிறது. இதனால், விவசாயிகளுக்கு மட்டும் இல்லாமல் நாட்டிற்கும் நஷ்டம் ஏற்படுகிறது.பயிர் காப்பீட்டு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு எளிதாக நிவாரணம் கிடைக்கும். இதனால், விவசாயி தொடர்ந்து நம்பிக்கையுடன் விவசாயத்தை மேற்கொள்ள வழி ஏற்படும்.</p>
<p>தினமலர்-18.1.2011<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;</p>
<h2><strong>கள் இறக்கும் போராட்டம் :கள் இயக்கத்தினர் ஆலோசனை</strong></h2>
<p>தாராபுரம்: தமிழ்நாடு கள் இயக்கம் ஆலோசனைக் கூட்டம், தாராபுரத்தில் நடந்தது. தமிழ்நாடு கள் இயக்க மாநில கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது: சட்டசபை கூட்டத்தொடரில் கடந்த 7ம் தேதி கவர்னர் பர்னாலா, தனது உரையில், &#8220;சுவைநீர்&#8217; கடைகளில் விற்கப்படும் என கூறியது கள்ளா; பதனீரா என்பது மக்களுக்கு புரியும் வகையில் அறிவிக்க வேண்டும். ஈரோடு அறச்சலூரில் 21ம் தேதி காலை 11.00 மணிக்கு கள் இறக்கி விற்கும், அரசியல் அமைப்பு சட்ட உரிமை மீட்பு அறப்போராட்டத்தில் 2,000 பேர் பங்கேற்கின்றனர். பால் உற்பத்தியாளருக்கு அவ்வப்போது விலை உயர்த்தப்படுவதுபோல், 23 ஆண்டுகளாக கள் மீதுள்ள தடையை அரசு நீக்க வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், அரசு கள் மீதுள்ள தடையை நீக்க உத்தரவிட வேண்டும். இல்லையெனில், கள்ளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளை தோற்கடிப்பதே கள் இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாக அமையும். &#8220;டாஸ்மாக்&#8217; கடைகளில் கள்ளையும் சேர்த்து விற்க அனுமதிக்க வேண்டும். கள் மீதான தடையை நீக்க அரசு ஏன் தயக்கம் காட்டி வருகிறது என்பதற்கு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, நல்லசாமி தெரிவித்தார். கள் இயக்க தாராபுரம் பகுதி அமைப்பாளர் மகுடபதி தலைமை வகித்தார். தமிழ்நாடு கள் இயக்க அமைப்பாளர் கதிரேசன், உப்பாறு பாசன விவசாயிகள் சங்க செயலாளர் ஈஸ்வரன், கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க செயலாளர் தங்கராசு முன்னிலை வகித்தனர்.</p>
<p>தினமலர்- 18.1.2011<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;<br />
ஜன., 21ல் கள் விற்பனை துவக்கம்: கள் இயக்கம் உறுதி</p>
<p>       பொங்கலூர் : &#8220;&#8221;உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து கள்ளுக்கான தடையை நீக்கினால், கள் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும்,&#8221; என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேசினார்.கள் இயக்க ஆலோசனை கூட்டம், பொங்கலூர் கண்டியம்மன் கோவிலில் நடந்தது. கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்றார். பொருளாளர் ராஜேந்திரன், முத்துசாமி முன்னிலை வகித்தனர்.கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேசியதாவது: ஜன., 21ம் தேதி காலை 11.00 மணிக்கு, ஈரோடு அரச்சலூரில் கள் விற்பனை துவங்கப்படும். முதல் விற்பனையை மத்திய அமைச்சர் துவக்கி வைக்கிறார். நீலகிரி தவிர மற்ற மாவட்டங்களில், 11.30 மணிக்கு கள் விற்பனை துவங்கப்பட்டு, சந்தைப்படுத்தப்படும். உலகில் 108 நாடுகளில், பனை, தென்னை மரங்கள் உ ள்ளன. அங்கெல்லாம் கள் இறக்க தடை இல்லை. இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கள் மதுவல்ல என்று உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது. அரசியலுக்கு உட்பட்டது மது விலக்கு சட்டமா, மது விலக்கிற்கு உட்பட்டது அரசியல் சட்டமா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். நம் கோரிக்கையில், நியாயம் இல்லை என்று அரசு நிரூபித்தால், பேராட்டம் கைவிடப்பட்டு, மன்னிப்பு கேட்கப்படும். இவ்வாறு, நல்லசாமி பேசினார்.கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி பேசுகையில், &#8220;&#8221;லட்சம் கோடி கொள்ளையடித்தவர்களை ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு கொடுக்கிறார்கள். அதை விடவா கெடுதல் செய்து விட்டோம். கோவையில் 1972ல் கட்டை வண்டி போராட்டம் நடந்தபோது, போராட்டத்தை கைவிட்டு பேச்சுக்கு அழைத்த கருணாநிதி, நான் அழைக்கவே இல்லை என்று திருப்பி அனுப்பியவர். இவர் நம்பத்தகுந்தவர் இல்லை. அதே நிலைமை இன்று கள்ளுக்கும் வந்து விடும். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,&#8221; என்றார். தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், வாவிபாளையம் ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி, கட்சி சார்பற்ற கொங்கு பேரவை மாநில அமைப்பாளர் மணிகண்டன், கோவை மாநகர் மாவட்ட தலைவர் தங்கராஜ், கோவை மாவட்ட தலைவர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.</p>
<p>தினமலர்&#8211;15.1.2011<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;<br />
21ல் கள் இறக்கும் போராட்டம் : தமிழ்நாடு கள் இயக்கம் உறுதி</p>
<p>                    காங்கயம் : &#8220;&#8221;ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரச்சலூரில் வரும் 21ல் கள் இயக்கம் சார்பில் கள் இறக்கி, விற்பனை செய்யப் படும்,&#8221; என ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேசினார். கள் இயக்கம் சார்பில் இயற்கை வள பாதுகாப்பு பொதுக்கூட்டம், காங்கயம் சீரணி அரங்கில் நடந்தது. இயற்கை வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் சண்முகம் வரவேற்றார். தலைவர் பொடாரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேசியதாவது: கள் இறக்குவதும், பருகுவதும் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. இந்த உரிமை தமிழகத்தில் மட்டும் கடந்த 23 ஆண்டுகளாக பறிக்கப்பட்டுள்ளது. இது, அரசியல மைப்பு சட்டத்தையும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை யும் மதிக்காத செயலாகும். உலகில் 108 நாடுகளில் பனை, தென்னை மரங்கள் உள்ளன. இதில் எந்த நாட்டிலும் கள் இறக்கவும், பருகவும் தடை கிடை யாது. ஆனால், தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன், 2011ம் ஆண்டில் தேர்தல் தேதி அறிவிப்பதற்குள், தமிழக அரசு கள்ளுக்கு உண்டான தடையை நீக்க வேண்டும். இல்லையெனில், தமிழக முதல்வர் மட்டுமின்றி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் எந்த தொகுதியில் நின்றாலும், கள் இயக்கம் அவர்களுக்கு எதிராக தேர்தல் பணியில் ஈடுபடும்; அவர்களை தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபடும். தமிழகத்தில் கள் இறக்க இழந்து விட்ட உரிமையை மீட்கும் வகையில், வரும் 21ம் தேதி, ஈரோடு மாவட் டத்தில் உள்ள அரச்சலூரில் கள் இறக்கி, விற்பனை செய்ய கள் இயக்கம் முடிவு செய்துள்ளது; முதல் விற் பனையை மத்திய அமைச்சர் துவக்கி வைக்க உள்ளார். கட்சி வேறுபாடு இல்லாமல், ம.தி.மு.க., உட்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன, என்றார். பேராசிரியர் மணிவண்ணன், திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவ சங்க தலைவர் தணிகாசலம், கவிஞர் ஜெயராம், உழவர் விவாதக்குழு அமைப்பாளர் முத்துலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.<br />
தினமலர்&#8211;13.1.2011<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;<br />
தடையை மீறி கள் இறக்கப்படும் தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு</p>
<p>    தர்மபுரி: &#8220;தமிழகம் முழுவதும் ஜனவரி 21 முதல் தடையை மீறி கள் இறக்கப்படும்&#8217; என, தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது.<br />
சேலம் மண்டல தென்னை, பனை, பாக்கு மரம் ஏறும் தொழிலாளர் நல சங்கம் சார்பில் தர்மபுரி ராஜகோபால்பூங்கா அருகே பொதுக்கூட்டம் நடந்தது. சேலம் மண்டலத் தலைவர் பாலன் தலைமை வகித்தார். மண்டல பொதுச் செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். தர்மபுரி மாவட்டத் தலைவர் ஜெயராஜ், பொருளாளர் செங்கோடன், பாலக்கோடு வட்டத் தலைவர் நாகராஜ், பாலக்கோடு வட்ட செயலாளர் ராஜா, துணை தலைவர் சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.<br />
            கூட்டத்துக்கு பின் தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களிடம் கூறியது: தமிழக அரசு கள் இறக்க அனுமதி தராததால் ஜனவரி 21 ம் தேதி தடையை மீறி ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் கள் இறக்கப்பட்டு மத்திய அமைச்சர் ஒருவரால் விற்பனை துவக்கப்படவுள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் தடையை மீறி கள் இறக்கப்படவுள்ளது. அரசு தடுத்தால் நீதிமன்றத்துக்கு செல்வோம்.<br />
                  கள் உணவோடு ஒரு பகுதி என்பதால் மற்ற மாநிலங்களில் கள் இறக்க தடையில்லை. தமிழகத்தில் டாஸ்மாக்கை அரசு நடத்தி கள் இறக்குவோர்களின் வாழ்க்கை தரத்தை நாசப்படுத்திவருகிறது. கள் இறக்கும் போராட்டத்துக்கு ஆதரவு கோரி அ.தி.மு.க., -ம.தி.மு.க.,- பா.ம.க.,- கம்யூனிஸ் கட்சிகளுடன் பேசப்பட்டுள்ளது.<br />
தர்மபுரியில் ஜனவரி 11ம் தேதி அசுவமேதா யாகம் நடத்த மாவட்ட எஸ்.பி., யிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னையில் குடியரசு தினத்தன்று அசுமேதா யாகம் நடத்தப்படும். கள் ஆய்வு குறித்து நீதிபதி சுப்பிரமணியன் தலைமையிலான குழு அறிக்கையை சட்ட சபையில் அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>
<p>தினமலர்&#8211;9.1.2011<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;<br />
<strong>உரத்த சிந்தனை: &#8220;கள்&#8217; தரும் வாழ்வு &#8211; ஸ்ரீனிவாசன் -பொறியாளர்</strong></p>
<p>                &#8220;கள் இறக்குவதை அனுமதிக்க வேண்டும்&#8217; என்று, தென்னை விவசாயிகள் வலியுறுத்துவதும், அரசு அதை தட்டிக் கழிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.</p>
<p>தமிழ்நாடு வருவாய் துறை, 2003 ஜன., 25ல், தென்னை விவசாயிகளுக்கு, தன் அறிக்கை எண், 44 மூலம், நிவாரணம் அறிவித்தது. மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்&#8230; 11 லட்சம் முழுமையாக அழிந்த தென்னை மரங்களுக்கும், 28 லட்சம் பகுதியாக அழிந்த தென்னை மரங்களுக்குமாக மொத்தம், 39 லட்சம் மரங்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம், 8.90 கோடி ரூபாய். அதாவது, ஒரு மரத்திற்கு, 22.85 ரூபாய். இப்போதாக இருந்தால், விலைவாசி ஏற்றத்தைச் சேர்த்து, 50 ரூபாயாக இருந்திருக்கலாம்.நூறு மரங்களை வைத்து, இரண்டு ஏக்கரில் பாடுபடும் விவசாயி, இத்தொகையைக் கொண்டு என்ன செய்ய முடியும்? இந்த பணத்தையும் முழுதாக எத்தனை பேர் வாங்கினரோ? இதுதான் தென்னை விவசாயிகளின் யதார்த்த நிலை.கடந்த அக்டோபர் 10ம் தேதி, கேரளாவின் தேசிக கர்சக சமாஜத்தின் பொதுச்செயலர் முதலாம்தோடு மணி, ஒரு கணக்கு கொடுத்துள்ளார்.அது-ஒரு தென்னை மரம், வருடத்தில் 120 காய்கள் கொடுக்கும். </p>
<p>அதன் மூலம், விவசாயிக்கு, காய் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வீதம், வருடத்தில் 600 ரூபாய் கிடைக்கும். அதுவே, &#8220;கள்&#8217; இறக்க குத்தகைக்கு விட்டால், மரத்துக்கு, மாதத்திற்கு 280 ரூபாய் வீதம், ஆறு மாதங்கள், &#8220;கள்&#8217; இறக்க முடியும் என்பதால், வருடத்திற்கு 1,680 ரூபாய் கிடைக்கும். அதாவது, அவன் வாழ்க்கைத்தரம் மும்மடங்கு உயரும்.&#8221;கள்&#8217; இறக்க அனுமதிப்பதன் மூலம், உடனே, &#8220;கள்&#8217; ஆறாக ஓடும், தேங்காயும், தேங்காய் எண்ணெயும் கிடைக்காது என்று தப்புக் கணக்கு போட வேண்டாம். கேரளாவின் புள்ளியியல் மற்றும் பொருளாதாரத்துறை இயக்குனரகம் கொடுத்துள்ள கணக்கின்படி, கேரளாவில் இருக்கும், 15.73 கோடி தென்னை மரங்களில், 2.5 லட்சம் மரங்களில் மட்டுமே, &#8220;கள்&#8217; இறக்கப்படுகிறது. இது, 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறது.</p>
<p>கேரளாவில், 2009 &#8211; 10ம் வருடம், மது, &#8220;கள்&#8217; மூலம், அரசுக்கு 4,260 கோடி ரூபாய் வருமானம் கிட்டியுள்ளது. மேலும், &#8220;கள்&#8217; மற்றும் பிற வகை மது வகைகளிலிருந்து கிடைக்கும் வருமானம், கேரள அரசுக்கு, 1:3 என்ற விகிதத்தில் இருக்கிறது என்று, ஒரு புள்ளி விவரம் தருகிறது. அதாவது, 4,260 கோடி ரூபாய் வருமானத்தில், 1,065 கோடி மட்டுமே, &#8220;கள்&#8217; மூலம் கிடைத்ததாக அக்கணக்கில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில், அதே கணக்கின்படி பார்த்தால், 14 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தில், &#8220;டாஸ்மாக்&#8217; 3,500 கோடி ரூபாய் மட்டுமே, &#8220;கள்&#8217; மூலம் இழக்கும் வாய்ப்பு உள்ளது. அதாவது 1,750 கோடி ரூபாய் மட்டுமே.கேரளாவில், விவசாயிக்கு, ஒரு மரத்துக்கு, மாதம் 280 ரூபாய் கிடைத்தாலும், &#8220;கள்&#8217; இறக்கும் வியாபாரி, மாதத்திற்கு 3,600 ரூபாய் சம்பாதிக்கிறார். அதாவது, ஒரு மரத்திற்கு, ஒரு நாளைக்கு, &#8220;கள்&#8217; நான்கு லிட்டர் வீதம், மாதம் 120 லிட்டர். லிட்டர் கள்ளுக்கு, 30 ரூபாய் என்ற கணக்கில், 3,600 ரூபாய் வருமானம் பார்க்கிறார். இதில், அவருடைய அவ்வளவு செலவும் அடங்கும்.இந்த &#8220;கள்&#8217;ளை, கள்ளுக் கடையில் லிட்டர், 50 ரூபாய் வரையில் விற்கின்றனர். </p>
<p>அதாவது, கடைக்காரர், 20 ரூபாய் லாபம் பார்க்கிறார். இது சதவீத கணக்கில், 66.66 சதவீதம் என்று வருகிறது. தமிழகத்தில் அரசே கடைகள் நடத்துவதால், இந்த லாபம் அரசுக்கே கிடைக்கும்.கேரளாவில், 2.5 லட்சம் மரங்களில், 1,800 லட்சம் லிட்டர், &#8220;கள்&#8217; இறக்கப்படுகிறது. இது, கணக்கிற்கு, 1,050 கோடி ரூபாய். தமிழகத்தின், 3,500 கோடி ரூபாய் கணக்கிற்கு, இது, 6,000 லட்சம் லிட்டர் என்று வரும். லிட்டருக்கு 20 ரூபாய் என்ற வகையில், அரசுக்கு, 1,200 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.ஆகவே, அரசுக்கு 550 கோடி ரூபாய் மட்டுமே இழப்பு வரும். மரத்துக்கு இவ்வளவு என்று வரி விதித்தால், இதில் சிறிதளவு குறைக்க முடியும். மேலும், இந்த, &#8220;கள்&#8217; இறக்கும் தொழில், 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும், வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கும்.கடந்த, 2003 &#8211; 04ம் ஆண்டு, அரசுக்கு கேளிக்கை வரி மூலம், 75 கோடி ரூபாய் கிடைத்தது. </p>
<p>தமிழில் பெயர் வைத்தால், கேளிக்கை வரி கிடையாது என்ற அரசாணையின் மூலம், 2008 &#8211; 09ல், இது, 12 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதில், இவ்வளவு இழக்கத் தயாராக இருக்கும் அரசு, பல்லாயிரம் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரவும், 1.5 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கவும், 550 கோடி ரூபாயை இழப்பாகக் கருதாமல், முதலீடாக நினைக்க வேண்டும்.ஆனால், இதை செய்யாமல் இருக்க அரசு சொல்லும் காரணம் ஏற்கக் கூடியதாக இல்லை. &#8220;பிராந்தி, விஸ்கி போன்ற மது வகைகளில், எங்களால் தரக்கட்டுப்பாடு செய்வது சுலபம். ஆனால், அது &#8220;கள்&#8217;ளில் முடியாது&#8217; என்று, கூறுகிறது. இப்படி பார்த்தால், டீ கடைகளில் கூட, அரசால் தரக்கட்டுப்பாடு செய்ய முடியாது. அதற்காக டீ கடைகளே வேண்டாம் என்றனரா?இங்கே, &#8220;கள்&#8217; விற்கப் போவது அரசே&#8230; தேவையான கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டியது தானே!</p>
<p>எங்கோ குடியே இல்லாத தேசத்தில் நாம், &#8220;கள்&#8217; இறக்க அனுமதி வேண்டும்&#8217; என்று கேட்கவில்லை. 14 ஆயிரம் கோடி ரூபாய்க்குக் குடியை பழக்கப்படுத்திவிடப்பட்ட இடத்தில் தான், உரிய பங்கை தென்னை விவசாயிகள் கேட்கின்றனர். &#8220;கள்&#8217;ளில், 4.5 சதவீதம் மட்டுமே, போதை தரும் ஆல்கஹால் உள்ளது. இது, பீரில் உள்ள ஆல்கஹால் அளவு மட்டுமே.ஆகவே, &#8220;கள்&#8217; மூலம் 55 சதவீதம் வரை போதை உள்ள மது வகைகளை உட்கொள்ளுபவர்களை திசை திருப்ப முடியுமானால், அதுவுமே ஒரு முன்னேற்றம் தான்.இவ்வளவு கூறியும் அரசு, &#8220;கள்&#8217; இறக்குவதை அனுமதிக்க மறுக்குமானால், அதற்குக் காரணம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்திய தயாரிப்பு, அன்னிய வகை மதுபான உற்பத்தியாளர்களுக்கு சலுகை காட்டி, அதன்மூலம், ஆளுவோர் பயன் பெறுகின்றனர் என்பது தான்.email: sp_mls@yahoo.co.in </p>
<p>தினமலர்&#8211; 8.1.2011<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;<br />
கள் இயக்கம் ராகுலுக்கு கடிதம்</p>
<p>                      ஈரோடு: தமிழகத்தில் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி, தமிழ்நாடு கள் இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, காங்கிரஸ் பொதுசெயலாளர் ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:&#8221;கள் மது அல்ல; உணவின் ஒரு பகுதி&#8217; என, இந்திய அரசியல் சட்டமும், உச்ச நீதிமன்ற தீர்ப்பும் கூறுகின்றன. கள் இறக்குவதும், பருகுவதும் அரசியல் சட்டம் மக்களுக்கு அளித்திருக்கும் உணவு தேடும் உரிமை. இந்த உரிமை தமிழகத்தில் மட்டும் பறிக்கப்பட்டுள்ளது.<br />
                    13வது லோக்சபா அமைக்கப்பட்டு, குடியரசு தலைவர் பேசியதிலும், 2009-2010 மற்றும் 2010-2011ம் ஆண்டு பட்ஜெட்டிலும், கள் இறக்குவோர் நலன் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க., இந்தியளவில் கள்ளை ஏற்றுக்கொள்கிறது. தமிழக அளவில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. வரும் 21ம் தேதி முதல் தமிழகத்தில் கள் இறக்கி சந்தைபீஞூபடுத்துவதை தீவிரப்படுத்துவது என, தமிழ்நாடு கள் இயக்கம் முடிவு செய்துள்ளது.&#8221;புளிக்காத கள் சத்தான உணவு&#8217; என, மஹாத்மா காந்தி கூறியுள்ளார். முதல்கட்டமாக ஜனவரி 21ல் ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் அத்தகைய கள்ளின் முதல் விற்பனையை துவக்கி வைக்க மத்தியரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ஒருவரை அழைக்க இயக்கம் முடிவு செய்துள்ளது. தாங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>
<p>தினமலர்&#8211;6.1.2011</p>
<p>&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;<br />
கருணாநிதி, ஜெ.,வை எதிர்த்து கள் இயக்கம் போட்டியிட முடிவு</p>
<p>                            அன்னூர் : &#8220;&#8221;முதல்வர் கருணாநிதி சட்டசபை தேர்தலில், எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் அவரை எதிர்த்து வேட்பாளர் நிறுத்தப்படுவார்,&#8221; என, கள் இயக்கத்தின் தலைவர் நல்லசாமி தெரிவித்தார். தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் அன்னூரில் நேற்று முன்தினம் நடந்தது. கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்து பேசுகையில், &#8220;ஜனவரி 21ம் தேதி தமிழகத்தில் தடையை மீறி, தென்னை மற்றும் பனை மரங்களில் கள் இறக்கப்படும். விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை பொருளாதார ரீதியில் மேம்படுத்த கள் இறக்குவதே ஒரே தீர்வு&#8217; என்றார்.<br />
                        தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைவர் நல்லசாமி பேசியதாவது: உலகில் 118 நாடுகளில் கள்ளுக்கு தடையில்லை. இந்தியாவில் பல மாநிலத்தில் கள் விற்கப்படுகிறது. தமிழகத்தில் கள் விற்பனை துவங்கினால், டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைந்து விடும். கேரள அரசால் கள் விவகாரத்துக்கு நியமிக்கப்பட்ட உதயபானு கமிஷன் அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் நாளை சேலத்தில் வெளியிடப்படுகிறது. கள்ளுக்கு ஆதரவு தருவதாக கூறி வந்த கருணாநிதி பின்வாங்கி விட்டார். இதற்காக நியமிக்கப்பட்ட சிவசுப்பிரமணியன் கமிட்டி அளித்த அறிக்கையை வெளியிடவில்லை. கமிட்டியின் பரிந்துரை குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைத்துள்ளார். இது விவசாயிகளை ஏமாற்றும் தந்திரம். வருகிற சட்டசபை தேர்தலில், முதல்வர் கருணாநிதி எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து கள் இயக்கம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி போட்டியிடுவார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து நான் (நல்லசாமி) போட்டியிடுவேன். எனது சொந்த ஊரான அரச்சலூரில் கள் இறக்கி மெயின் ரோட்டில் பானையில் வைத்து விற்பனை செய்வேன். இலங்கையில் கள்ளை பதப்படுத்தி, டப்பாக்களில் நிரப்பி சுகாதாரமான முறையில் விற்கின்றனர். இவ்வாறு நல்லசாமி பேசினார். மாநகர் தலைவர் தங்கராஜ் பேசுகையில், &#8220;கோவை மாவட்டத்தில் கள் இறக்கும் போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெறும்&#8217; என்றார். மாவட்ட தலைவர் சண்முகம், குப்பேபாளையம் நடராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.</p>
<p>தினமலர்&#8211;23.12.2010<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;<br />
ஜனவரியில் &#8220;கள்&#8217; இறக்க முடிவு : &#8220;கள்&#8217; இயக்கம் தீவிரம்</p>
<p>         சோமனூர் :  தமிழகம் முழுவதும் &#8220;கள்&#8217; இறக்கும் முயற்சியில் ஜனவரி 21ம் தேதி ஈடுபட கள் இயக்கம் முடிவு செய்துள்ளது.இதற்கான ஆயத்த கூட்டங்கள் நாளை முதல் துவங்குகிறது.<br />
தமிழக கள் இயக்கத்தின் சார்பில் கோவையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஜன.,21ம் தேதி விவசாயிகள் தென்னை மரங்களில் கள் இறக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, பகுதிவாரியாக விவசாயிகள் மற்றும் தென்னை வளர்ப்போர், மரம் ஏறும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரில் சென்று சந்தித்து இதற்கான ஆயத்தங்களை செய்ய தமிழக கள் இயக்கம் முடிவு செய்துள்ளது.<br />
முதல்கட்டமாக இந்த கூட்டம், நாளை 17ம் தேதி பொங்கலூர் மற்றும் சுல்தான் பேட்டை பகுதியில் துவங்குகிறது. வரும் 18ம் தேதி காலை 10.00 மணிக்கு சூலூர், முத்துக்கவுண்டன்புதூர் மாகாளியம்மன் கோவில் மண்டபத்தில் நடக்கிறது. மாலை 3.00 மணிக்கு சோமனூரில், நகர தலைவர் தண்டபாணி இல்லத்திலும் இந்த கூட்டம் நடக்கிறது.<br />
தொடர்ந்து பல்லடம், கொடுவாய் பகுதிகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தினமும் பகுதிவாரியாக இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இக்கூட்டங்களில், தென்னை மரங்களில் &#8220;கள்&#8217; இறக்க தேவையான ஆயத்தங்களைச் செய்ய விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்படும்.  இந்த தகவலை கோவை மாவட்ட கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம் தெரிவித்தார்.<br />
 தினமலர்&#8211; 15.12.2010</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/thennaitamilnadu.wordpress.com/61/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/thennaitamilnadu.wordpress.com/61/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/thennaitamilnadu.wordpress.com/61/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/thennaitamilnadu.wordpress.com/61/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/thennaitamilnadu.wordpress.com/61/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/thennaitamilnadu.wordpress.com/61/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/thennaitamilnadu.wordpress.com/61/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/thennaitamilnadu.wordpress.com/61/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/thennaitamilnadu.wordpress.com/61/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/thennaitamilnadu.wordpress.com/61/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/thennaitamilnadu.wordpress.com/61/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/thennaitamilnadu.wordpress.com/61/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/thennaitamilnadu.wordpress.com/61/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/thennaitamilnadu.wordpress.com/61/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thennaitamilnadu.wordpress.com&amp;blog=7126894&amp;post=61&amp;subd=thennaitamilnadu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://thennaitamilnadu.wordpress.com/2011/01/21/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/fefd5c3a8e5f2be9345e0f4ba11cbd37?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thennaitamilnadu</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கள் வேண்டும் &#8211; தலைவர்கள்</title>
		<link>http://thennaitamilnadu.wordpress.com/2011/01/20/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://thennaitamilnadu.wordpress.com/2011/01/20/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 20 Jan 2011 17:05:00 +0000</pubDate>
		<dc:creator>thennaitamilnadu</dc:creator>
				<category><![CDATA[others]]></category>

		<guid isPermaLink="false">http://thennaitamilnadu.wordpress.com/?p=56</guid>
		<description><![CDATA[புளிக்காத கள் சத்தான உணவு - &#8211; மகாத்மா காந்தி &#8212; யங் இந்தியா &#8211; 30.10.1937 &#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211; கள் ஏழைகளின் சோர்வை போக்கும் டானிக் . மதுவிலக்கை ரத்து செய்துவிடவேண்டும் என்று சொல்லும் நான் பழையபடி கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்று சொல்லவில்லை, ஆரம்பத்தில் சொன்னபடி தோப்பில் கள் விற்கவேண்டும். கள்ளை விஷமாக்கி விடும்முறையை தடுத்துவிடவேண்டும்.&#8211; தந்தை பெரியார். குடந்தை மூர்த்தி கலை அரங்கில் 22.1.1963 நடந்த மாநாட்டில் பேசியது 1.2.1963 குடியரசு இதழில் வெளிவந்தது. [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thennaitamilnadu.wordpress.com&amp;blog=7126894&amp;post=56&amp;subd=thennaitamilnadu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>       <strong>புளிக்காத கள் சத்தான உணவு  </strong>- &#8211; மகாத்மா காந்தி &#8212; யங் இந்தியா &#8211;  30.10.1937<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;</p>
<p>                                       <strong> கள்  ஏழைகளின்  சோர்வை போக்கும் டானிக் .<br />
     மதுவிலக்கை ரத்து செய்துவிடவேண்டும் என்று சொல்லும் நான் பழையபடி கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்று சொல்லவில்லை, ஆரம்பத்தில் சொன்னபடி தோப்பில் கள் விற்கவேண்டும். கள்ளை விஷமாக்கி விடும்முறையை தடுத்துவிடவேண்டும்.</strong>&#8211; தந்தை பெரியார்.<br />
குடந்தை மூர்த்தி கலை அரங்கில் 22.1.1963  நடந்த மாநாட்டில் பேசியது  1.2.1963  குடியரசு இதழில் வெளிவந்தது.<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;</p>
<p>            <strong>கள் முக்கியமானது, அவசியமானது, கவனிக்கப்படும்</strong>. &#8212; மாண்புமிகு டாக்டர். தமிழக முதல்வர்  கலைஞர் கருணாநிதி கள் இயக்க  பொறுப்பாளர்களிடம்  செம்மொழி மாநாட்டிற்கு   முன் 22.6.2010௦ -ல்<br />
தெரிவித்தது.<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;-</p>
<p><strong>கள் இறக்க அனுமதி அளிப்பது அ.தி .மு.க ஆட்சிக்கு வந்தால் பரிசீலிக்கப்படும்</strong>. &#8212; முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா -2009 &#8211; பாராளுமன்ற தேர்தல் பிரச்சார  கூட்டத்தில் பரமக்குடியில் பேசியது. </p>
<p>&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;<br />
கள் இறக்கும் போராட்டத்திற்கு ஆதரவு – சீமான்<br />
2011/01/20 , 5:43 AM [UTC]<br />
இது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.</p>
<p>மக்களின் உடல் நலத்தைக் காக்கும் கள்ளுக்கு தமிழகத்தில் கடந்த 22 ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கள் தமிழர்களின் வாழ்வோடு இணைந்த பிரிக்க முடியாத உணவு என்பதை பழந்தமிழர் இலக்கியங்களிலிருந்து அறியலாம். உடல் வலியுடன் வேலை செய்யும் கிராம மக்கள், கள்ளை வலி நிவாரணியாக நினைக்கிறார்கள். பொருளாதார ரீதியாக மக்களுக்கு கள் ஏற்ற பானமும் ஆகும்.கள் மது அல்ல; உணவின் ஒரு பகுதி. கள் இறக்குவது மக்களுக்கு கொடுத்துள்ள உணவு தேடும் உரிமை என்று இந்திய அரசியல் சட்டம் பிரிவு 47 சொல்கிறது.</p>
<p>கேரளாவில் மது கொள்கை மற்றும் மதுவிலக்கு தொடர்பாக நியமிக்கப்பட்ட உதயபானு கமிஷன் தனது அறிக்கையில், “கள்  மது அல்ல; உணவின் ஒரு பகுதி’ என பரிந்துரை அளித்துள்ளது. ஆனால் தமிழகத்திலோ மது விலக்குச் சட்ட்த்தின் படி தமிழக அரசு கள்ளைத் தடை செய்துள்ளது. இதன் முலம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உணவு தேடும் உரிமையைத் தமிழக அரசு பறிக்கிறது என அறிந்து கொள்ளலாம். ஆகையால் திட்டமிட்டே நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையிலான கமிஷனின், கள் குறித்த அறிக்கையை வெளியிடாமல் தமிழக அரசு காலம் கடத்துகிறது.இது மிகவும் அநீதியான செயலாகும்.</p>
<p>1927 இல் கள்ளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்னை மரங்களை வெட்டிய பெரியார் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு 1963 இல் கும்பகோணத்தில் நடைபெற்ற கள் வேண்டுவோர் மாநாட்டில் கலந்து கொண்டு, கள்ளுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்திருக்கிறார்.பெரியாரின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்வோரும், கள் மது என்று கூறி மது ஒழிப்பு மாநாடு நடத்துவோரும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். கள்ளுக்கு தடை என்றால் அரசு விற்பனை செய்யும் பீர், பிராந்தி போன்றவை புனித நீரா?மக்கள் இறக்கும் கள்ளுக்கு தடை விதிக்கும் அரசாங்கம், தானே மதுவை தெருத் தெருவாக விற்பனை செய்கிறது.அரசின் வருமானத்தைத் தாண்டி, பண முதலைகள் மற்றும் தங்கள் பினாமிகளின் வருமானம் பாதிக்கப் படக்கூடாது என்பது தானே முக்கிய நோக்கம்.வருமானத்திற்காக உடலைக் கெடுக்கும் மது வகைகளுக்கு பருவந் தோறும் இலக்கு வைத்து வணிகம் நடத்தும் தமிழக அரசு,மக்களின் உடல் நலத்தைக் காக்கும் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும்.</p>
<p>மாடு வைத்துள்ளவர்கள் பாலைக் கறந்து விற்பது மாதிரி பனை மரம் வைத்திருப்பவர்கள் எந்த லைசென்ஸூம் இல்லாமல் கள் விற்கலாம் என்று அரசு அறிவிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 21 ஆம் தேதி ஈரோடு அரச்சலூரில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் நடைபெறும் கள் இறக்கும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.</p>
<p>நன்றி,<br />
சீமான்</p>
<p>நாம் தமிழர் கட்சி</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/thennaitamilnadu.wordpress.com/56/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/thennaitamilnadu.wordpress.com/56/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/thennaitamilnadu.wordpress.com/56/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/thennaitamilnadu.wordpress.com/56/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/thennaitamilnadu.wordpress.com/56/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/thennaitamilnadu.wordpress.com/56/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/thennaitamilnadu.wordpress.com/56/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/thennaitamilnadu.wordpress.com/56/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/thennaitamilnadu.wordpress.com/56/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/thennaitamilnadu.wordpress.com/56/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/thennaitamilnadu.wordpress.com/56/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/thennaitamilnadu.wordpress.com/56/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/thennaitamilnadu.wordpress.com/56/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/thennaitamilnadu.wordpress.com/56/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thennaitamilnadu.wordpress.com&amp;blog=7126894&amp;post=56&amp;subd=thennaitamilnadu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://thennaitamilnadu.wordpress.com/2011/01/20/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/fefd5c3a8e5f2be9345e0f4ba11cbd37?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thennaitamilnadu</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கள் விருந்து</title>
		<link>http://thennaitamilnadu.wordpress.com/2009/06/15/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/</link>
		<comments>http://thennaitamilnadu.wordpress.com/2009/06/15/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/#comments</comments>
		<pubDate>Mon, 15 Jun 2009 11:28:28 +0000</pubDate>
		<dc:creator>thennaitamilnadu</dc:creator>
				<category><![CDATA[C.P.Eswaran]]></category>

		<guid isPermaLink="false">http://thennaitamilnadu.wordpress.com/?p=43</guid>
		<description><![CDATA[அன்னையின் பால்அன்பிற்கு                             தென்னiயின் பால் தெம்பிற்கு கவிதை முழக்கம் கள் விருந்து கவிஞர் சோழவலசு ஜெயராம் மாநில கொள்கைபரப்புச் செயலாளர் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கள் விருந்து தென்னங் கள் குடித்தால் கன்னங் கதுப் பேறும்! ஒரு மரத்துக் கள் குடித்தால் அடி மரமாய் உடம்பு வரும் ! பனை மரத்துக் கள் குடித்தால் கட [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thennaitamilnadu.wordpress.com&amp;blog=7126894&amp;post=43&amp;subd=thennaitamilnadu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align:center;">அன்னையின் பால்அன்பிற்கு 				                           தென்னiயின் பால் தெம்பிற்கு</p>
<h1 style="text-align:center;"><strong><span style="color:#339966;"> கவிதை முழக்கம்</span></strong></h1>
<p style="text-align:center;">
<h1 style="text-align:center;"><span style="color:#993300;">கள் விருந்து</span></h1>
<p style="text-align:center;">கவிஞர் சோழவலசு ஜெயராம்<br />
மாநில கொள்கைபரப்புச் செயலாளர்<br />
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்</p>
<h3 style="text-align:center;"><span style="color:#00ff00;">கள் விருந்து</span></h3>
<p style="text-align:center;">தென்னங் கள் குடித்தால்<br />
கன்னங் கதுப் பேறும்!<br />
ஒரு மரத்துக் கள் குடித்தால்<br />
அடி மரமாய் உடம்பு வரும் !<br />
பனை மரத்துக் கள் குடித்தால்<br />
கட வெலும்பும் இரும்பாகும் !</p>
<p style="text-align:center;">ஆலமரத்துக் கள் குடித்தால்<br />
அலிக்கும் ஆண்மை வரும் !<br />
பொம்மரத்துக் கள் குடித்தால்<br />
பொன்னிறமாய் உடம்பு வரும்.</p>
<p style="text-align:center;">எம். சியைக் குடித்தால்<br />
எமலோகம் தான் கிடைக்கும் !<br />
மானிட்டர் குடித்தால்<br />
மானம் பறிபோகும் !<br />
கோல்கொண்டா குடித்தால்<br />
குடும்பமே கூறுகெடும் !<br />
ஜின்னைக் குடித்தால்<br />
சீக்கரமே மலடாவாய் !<br />
ரம்மை குடித்தால்<br />
ரத்தம் சுண்டிவிடும் !</p>
<p style="text-align:center;">கல்யாணி பீர் குடித்தால்<br />
காமாலை வந்து விடும் !<br />
பைவ் தவ்சன் பீர் குடித்தால்<br />
பரிதாபச் சாவு வரும் !<br />
புல்லட் பீர் குடித்தால்<br />
புத்தி பேதலிக்கும் !<br />
கிங் பிசர் பர் குடித்தால்<br />
கிறு கிறுத்துப் போயலைவாய்</p>
<p style="text-align:center;">பான் பராக் போட்டால்<br />
பைத்தியம் பிடிக்குமடா!<br />
கஞ்சாக் கடித்தால்<br />
கட்டுடம்பும் மெலியுமடா!<br />
மூக்குப்பொடி போட்டால்<br />
மூளையிலே புற்று வரும் !</p>
<p style="text-align:center;">கள் நமக்குச் சுகமளிக்கும் !<br />
வெள்ளை ரத்தம் &#8211; அந்தக்<br />
கரும்பனையும், தென்னையும் நம்<br />
கழனித் தெய்வம் !</p>
<p style="text-align:center;">கள் குடித்துக் கெட்டாரைக்<br />
கேட்ட துண்டா?<br />
கள் குடித்துச் செத்தாரைப்<br />
பார்த்த துண்டா?</p>
<p style="text-align:center;">எலும்புறுக்கி நோய்  தீரும்<br />
தென்னங் கள்ளால் !<br />
எரிசூட்டு நோய் தீரும<br />
பனையின் கள்ளால் !</p>
<p style="text-align:center;">அதிகாலைக் கள் கடித்தால்<br />
அச்சம் போகும் !<br />
அந்திக் கள் குடித்தால்<br />
ஆயுள் நீளும் !</p>
<p style="text-align:center;">தாகம் எடுக்கையிலே<br />
தமிழ்க்கிழவி அவ்வை<br />
கள்ளை அருந்தித்தான்<br />
களிப்போடு வீற்றிருந்தாள் !</p>
<p style="text-align:center;">கடையேழு வள்ளல்களும்<br />
கவிஞர்கள் எல்லோர்க்கும்<br />
கள் விருந்து கொடுத்தன்றோ<br />
கௌவரம் செய்தார்கள் !</p>
<p style="text-align:center;">வில்வேந்தர் வேல்வேந்தர்<br />
வீரவாள் வேந்தர்<br />
கள்ளை அருந்தியன்றோ<br />
கட்டுடம்பு வளர்த்தார்கள் !</p>
<p style="text-align:center;">தங்கம் ஜொளித்த<br />
சங்க காலத்து<br />
மங்கையர்கள் எல்லோரும்<br />
கள்ளருந்தி வாழ்ந்ததது- நம்<br />
கண்காணா வரலாறு!</p>
<p style="text-align:center;">சித்தர்கள் நமக்குச்<br />
சீதனமாய் கொடுத்த<br />
முத்தனைய கள் வேண்டி<br />
முழக்கம் செய்திடுவோம் !</p>
<p style="text-align:center;">விருந்தாகி மருந்தாகி<br />
விடிகாலை உணவாகி<br />
விவசாயி வாழ்க்கையிலே<br />
வருமானம் வழங்குகிற<br />
வரம் கொடுக்கும் தேவதைகள் !</p>
<p style="text-align:center;">மரமேறும் தொழிலாளர்<br />
மண்பாண்டத் தொழிலாளர்<br />
தச்சுத் தொழிலாளர்<br />
குடும்பத்தை எல்லாம்<br />
தாங்கி வளர்த்துகிற<br />
தனிக் கடவுள் கள்ளாகும்</p>
<p style="text-align:center;">கள்ளைப் பதப்படுத்தி<br />
கடல் கடந்த நாட்டிற்கு<br />
கப்பலிலே அனுப்பி<br />
கணக்கற்ற பணமாக்கி வாழுகிறான்<br />
கண்டித் தீவினிலே</p>
<p style="text-align:center;">கள்ளைப் பதப்படுத்திக்<br />
காக்கும் உறை போட்டு<br />
ஏற்றுமதி செய்யுங்கள்<br />
ஏராளப் பணங்குவியும் !<br />
தாராளமாய்த்<br />
தமிழ்நாடு செழிப்படையும!;</p>
<p style="text-align:center;">கள் கட்டி விடுவதனால்<br />
கடும் நோய்கள் அண்டாமல்<br />
தென்னை மரம் அத்தனையும்<br />
குலை குலையாய்க்  காய்க்கிறது!</p>
<p style="text-align:center;">அளவான போதை<br />
அளிக்கும் பொருளென்றால்<br />
அருந்தலாம் என்று<br />
அரசியல் சாசனமே<br />
அதிகாரம் தருகிறது!</p>
<p style="text-align:center;">அளவான போதை<br />
அளிக்கின்ற கள்ளை<br />
ஏனருந்தக் கூடாது!<br />
ஏனிறக்கக் கூடாது!</p>
<p style="text-align:center;">கன்னடத்தில் கள் குடித்து<br />
களிப்போடு வாழுகிறான் !<br />
ஆந்திரத்தில் கள் குடித்து<br />
அற்புதமாய் வாழகிறான!<br />
கேரளத்தில் கள் குடித்து<br />
கிற கிறப்புக் காணுகிறான் !<br />
தமிழ்நாட்டிவ் மட்டும் ஏன்<br />
தடையப்பா- அதை<br />
உடையப்பா!</p>
<p style="text-align:center;">நூற்றிநாற்பத்தெட்டு<br />
உலகத்து நாடுகளில்<br />
நீக்கமறக் கள்ளுண்டு<br />
நிம்மதியாய்க் குடிக்கின்றார் !</p>
<p style="text-align:center;">அன்று!<br />
ஆடு விற்ற பணம்<br />
அமுதா ஒயின்சுலையும்<br />
மாடு விற்ற பணம்<br />
மாதவி ஒயின்சுலையும்<br />
காடு விற்ற பணம்<br />
கங்கா ஒயின்சுலையும்<br />
காணாமல் போனதடா!</p>
<p style="text-align:center;">இன்று<br />
பால்ப் பணமெல்லாம் &#8211; பிராந்திப்<br />
பால் குடிக்கப் போண்<br />
பாழாகப் போகிறதே!<br />
காய்ப் பணமெல்லாம் &#8211; சீசாக்<br />
காய்க் கடைக்குப் போய்<br />
காணாமல் போகிறதே</p>
<p style="text-align:center;">கொள்ளு விற்ற பணம்<br />
கோட்டர்க் கடையிலே<br />
கோவிந்தோ ஆகுதடா!<br />
எள்ள விற்ற பணம்<br />
எம்.சி.க். கடையிலே<br />
எமலோகம் போகுதடா?</p>
<p style="text-align:center;">கூலிப் பணமெல்லாம்<br />
கொஞ்சமும் மிஞ்சாமல்<br />
விஸ்கிக் கடையிலே<br />
விரையம் ஆகிறதே!</p>
<p style="text-align:center;">பீத்தண்ணிப் பிராந்தியினால்<br />
வாந்தி வரும்<br />
வயிர் எரியும்<br />
இரண்டு குடல் செத்து விடும்<br />
ஈரலும் கெட்டு விடும் !</p>
<p style="text-align:center;">கள்ளுக்கு<br />
விலை குறைவு!<br />
வயிர் நிறைவு!<br />
மன நிறைவு<br />
முகப் பொழிவு &#8211; அகத்தெளிவு!</p>
<p style="text-align:center;">சட்டத்தடை கண்டு<br />
அதிகாரப் படை கண்டு!<br />
பயங் கொண்டு!<br />
முடவன் போல் முடங்கிக்கிடந்தால்<br />
முன்னேற்றம் நமக்கில்லை!</p>
<p style="text-align:center;">சும்மா இருப்பவனைச்<br />
சுடு காடும் மதிக்காது<br />
சோம்பேறிக் கூட்டத்தை<br />
இடுகாடும் ஏற்காது!</p>
<p style="text-align:center;">அச்சம் போக்கி!<br />
அடிமைத்தனம் போக்கி!<br />
உச்சப்போராட்டம்<br />
உடன் நடத்தப் புறப்படுங்கள் !</p>
<p style="text-align:center;">வாழ்ந்தாலும் இம் மண்ணில்<br />
வீரராக வாழ்வோம் !<br />
வீழ்ந்தாலும் இம் மண்ணில்<br />
வீரனாக வீழ்வோம் !</p>
<p style="text-align:center;">ஆடத்தான் போகின்றோம்<br />
வீர வேட்டை!<br />
அடையத்தான் போகின்றோம்<br />
வெற்றிக் கோட்டை!</p>
<h2><span style="color:#00ccff;">அப்பாவி உழவர்களின்<a href="http://thennaitamilnadu.files.wordpress.com/2009/06/untitled1.jpg"><img class="alignright size-medium wp-image-47" title="Thalaivar" src="http://thennaitamilnadu.files.wordpress.com/2009/06/untitled1.jpg?w=300&#038;h=215" alt="Thalaivar" width="300" height="215" /></a></span><span style="color:#00ccff;"><br />
</span></h2>
<h2><span style="color:#00ccff;"> </span></h2>
<h2></h2>
<h2><span style="color:#00ccff;">தற்காப்பு மந்திரம்</span><span style="color:#00ccff;"><br />
</span></h2>
<h2><span style="color:#00ccff;"> </span></h2>
<h2></h2>
<h2><span style="color:#00ccff;">அசைக்க முடியாத</span><span style="color:#00ccff;"><br />
</span></h2>
<h2><span style="color:#00ccff;"> </span></h2>
<h2></h2>
<h2><span style="color:#00ccff;">ஆயிரங்கால் மண்டபம்</span><span style="color:#00ccff;"><br />
</span></h2>
<h1 style="text-align:center;"><span style="color:#00ccff;"> </span></h1>
<pre style="text-align:center;"><span style="color:#00ccff;">
</span></pre>
<pre style="text-align:center;"><span style="color:#00ccff;">
</span></pre>
<pre style="text-align:center;"><span style="color:#00ccff;"> </span></pre>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/thennaitamilnadu.wordpress.com/43/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/thennaitamilnadu.wordpress.com/43/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/thennaitamilnadu.wordpress.com/43/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/thennaitamilnadu.wordpress.com/43/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/thennaitamilnadu.wordpress.com/43/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/thennaitamilnadu.wordpress.com/43/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/thennaitamilnadu.wordpress.com/43/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/thennaitamilnadu.wordpress.com/43/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/thennaitamilnadu.wordpress.com/43/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/thennaitamilnadu.wordpress.com/43/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/thennaitamilnadu.wordpress.com/43/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/thennaitamilnadu.wordpress.com/43/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/thennaitamilnadu.wordpress.com/43/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/thennaitamilnadu.wordpress.com/43/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thennaitamilnadu.wordpress.com&amp;blog=7126894&amp;post=43&amp;subd=thennaitamilnadu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://thennaitamilnadu.wordpress.com/2009/06/15/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/fefd5c3a8e5f2be9345e0f4ba11cbd37?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thennaitamilnadu</media:title>
		</media:content>

		<media:content url="http://thennaitamilnadu.files.wordpress.com/2009/06/untitled1.jpg?w=300" medium="image">
			<media:title type="html">Thalaivar</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title></title>
		<link>http://thennaitamilnadu.wordpress.com/2009/06/15/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://thennaitamilnadu.wordpress.com/2009/06/15/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 15 Jun 2009 11:21:56 +0000</pubDate>
		<dc:creator>thennaitamilnadu</dc:creator>
				<category><![CDATA[C.P.Eswaran]]></category>

		<guid isPermaLink="false">http://thennaitamilnadu.wordpress.com/?p=41</guid>
		<description><![CDATA[<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thennaitamilnadu.wordpress.com&amp;blog=7126894&amp;post=41&amp;subd=thennaitamilnadu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/thennaitamilnadu.wordpress.com/41/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/thennaitamilnadu.wordpress.com/41/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/thennaitamilnadu.wordpress.com/41/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/thennaitamilnadu.wordpress.com/41/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/thennaitamilnadu.wordpress.com/41/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/thennaitamilnadu.wordpress.com/41/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/thennaitamilnadu.wordpress.com/41/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/thennaitamilnadu.wordpress.com/41/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/thennaitamilnadu.wordpress.com/41/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/thennaitamilnadu.wordpress.com/41/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/thennaitamilnadu.wordpress.com/41/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/thennaitamilnadu.wordpress.com/41/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/thennaitamilnadu.wordpress.com/41/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/thennaitamilnadu.wordpress.com/41/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thennaitamilnadu.wordpress.com&amp;blog=7126894&amp;post=41&amp;subd=thennaitamilnadu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://thennaitamilnadu.wordpress.com/2009/06/15/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/fefd5c3a8e5f2be9345e0f4ba11cbd37?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thennaitamilnadu</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>உழவர் காவலன்    N.S.பழனிசாமி M.A. Ex. M.L.A.,</title>
		<link>http://thennaitamilnadu.wordpress.com/2009/06/15/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/</link>
		<comments>http://thennaitamilnadu.wordpress.com/2009/06/15/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Mon, 15 Jun 2009 10:36:27 +0000</pubDate>
		<dc:creator>thennaitamilnadu</dc:creator>
				<category><![CDATA[C.P.Eswaran]]></category>

		<guid isPermaLink="false">http://thennaitamilnadu.wordpress.com/?p=37</guid>
		<description><![CDATA[சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 88 வது பிறந்த தினம் 6.2.2011 ஞாயிறு காலை 10.௦௦௦00 மணியளவில் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் . விதைக்க விளைவிக்க மட்டுமே தெரிந்த விவசாயிகளை விலை கேட்க வைத்தவர் உழவர் பெருந்தலைவர் நிலவரி , கடன் ,மின்கட்டணம் கட்டத்தவறினால் ஆடு , மாடு பிடித்து , அண்டா குண்டா தூக்கி ஜப்தி ஏலம் செய்து அவமானப்படுத்திய அரசுடன் போராட வைத்தவர் உழவர் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thennaitamilnadu.wordpress.com&amp;blog=7126894&amp;post=37&amp;subd=thennaitamilnadu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>    சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்<br />
    உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு  அவர்களின் 88 வது பிறந்த தினம் 6.2.2011   ஞாயிறு    காலை   10.௦௦௦00  மணியளவில் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் .  </p>
<p>                      விதைக்க விளைவிக்க மட்டுமே தெரிந்த விவசாயிகளை விலை கேட்க வைத்தவர் உழவர் பெருந்தலைவர்  நிலவரி , கடன் ,மின்கட்டணம்  கட்டத்தவறினால் ஆடு , மாடு பிடித்து ,  அண்டா குண்டா தூக்கி ஜப்தி  ஏலம் செய்து அவமானப்படுத்திய அரசுடன் போராட வைத்தவர் உழவர் பெருந்தலைவர்.<br />
           கடன் தள்ளுபடிகளும் ,கட்டணமில்லா  மின்சாரமும்,  விளை   பொருளுக்கு விலையும் உழவர் பெருந்தலைவர் தலைமையில் விவசாயிகள் போராடித்தான் பெறமுடிந்தது .<br />
                                                  அவர் வாழ்நாள் போராளி<br />
            &#8221; போராடினால் உண்டு பொற்காலம் ! போராட்டமே வாழ்வின் உற்சாகம் !&#8221;<br />
என இறுதி மூச்சு விடும் வரை போராடி வந்த அவர் பிறந்த நாளை இவ்வாண்டு போராடியே கொண்டாடுகிறோம் .</p>
<p>போராட்ட தலைமை :<br />
உழவர் காவலன்  N.S.பழனிசாமி M.A. Ex. M.L.A.,<br />
                                    முன்னிலை :<br />
செ. நல்லசாமி M.A.B.L,   தமிநாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்<br />
 உடுமலை வேலாயுதம்  B.Sc (Ag)  தலைவர், தமிழ்நாடு விவசாய விழிப்புணர்வு இயக்கம்.<br />
 இடியோசை மணிவேல், மாநில பொதுச்செயலாளர். </p>
<p>மருத்துவர்.தங்கராஜ். M.B.B.S. DCH.   கோவைமாநகர் மாவட்டத்தலைவர்<br />
A.Ku.சண்முகம்  கோவை மாவட்டத்தலைவர்<br />
K.R.சதாசிவம்  மாவட்ட பொதுச்செயலாளர்.<br />
குள்ளப்பகவுண்டர்  மாவட்ட பொருளாளர்</p>
<p>K.K.சந்திரசேகர்   கோவை மாவட்ட இளைஞர் அணித்தலைவர்<br />
பூராண்டாம்பாளையம்.  மணி   மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர்<br />
A.காளிமுத்து  திருப்பூர் மாவட்டத்தலைவர்<br />
நால்ரோடு நடராஜன் துணைத்தலைவர்.<br />
K.M.ராமசாமி  திருப்பூர் மாவட்டசெயலாளர்<br />
கண்ணாம்பாளையம் பொன்னுச்சாமி  மாவட்ட செயலாளர்<br />
வன்னாபட்டி சிவசாமி  மாவட்ட பொருளாளர்<br />
K.P.சண்முகசுந்தரம்  திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கத்தலைவர்<br />
C.P.ஈஸ்வரன்  திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கசெயலாளர்<br />
கணேச பாண்டியன் சிவகங்கை மாவட்டத்தலைவர்.<br />
மார்க்கெட்   G.S.மணி  திருப்பூர் மாநகரத்தலைவர்<br />
சாமிக்கண்ணு  குண்டடம் வட்டாரத்தலைவர்<br />
வெறுவேடம்பாளையம் ராசு குண்டடம் வட்டாரச்செயலாளர்<br />
சிவசாமி சேர்வை புதுக்கோட்டை மாவட்டத்தலைவர்<br />
அப்பாவு பாலாண்டர்  B.A.B.L., செயலாளர்<br />
செங்கோல் உடையார்  பொருளாளர்<br />
T.R.T. தண்டபாணி துணைத்தலைவர்<br />
வீரத்தளபதி சுப்பிரமணியம் வேடசெந்தூர்<br />
முத்துசாமிக்கவுண்டர்  போராட்டக்குழு தலைவர்<br />
ராமசாமிக்கவுண்டர் பொருளாளர்<br />
வெங்கிடுசாமி  திண்டுக்கல் மாவட்டம்<br />
கொண்டப்பகவுண்டர் மதுரை மாவட்டத்தலைவர்<br />
நம்பிராஜன் நெல்லை மாவட்டத்தலைவர்</p>
<p>கவிஞர் சோழவலசு ஜெயராம்  மாநில கொள்கைபரப்புச்செயலாளர்<br />
கோகுல் ரவி<br />
சதீஸ்குமார்   திருப்பூர் மாவட்ட இளைஞரணித்தலைவர்<br />
கானூர் அருணாச்சலம்  அவினாசி வட்டாரச்செயலாளர்<br />
       மற்றும் மாவட்ட வட்டார பொறுப்பாளர்கள்<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;-<br />
கோரிக்கைகள் :<br />
     அரசு தானே முன்வது 2,00,000 விவசாய மின் இணைப்பிக்கு விண்ணப்பித்து   10  ஆண்டுகள்  ஆனா  விவசாயிகளுக்கு  ஓராண்டுக்குள்  இலவச  மின் இணைப்பு கொடுப்பதாக   அறிவித்ததை எந்த நிபந்தனையும் விதிக்காமல் கொடுக்க வேண்டும் .<br />
                           1989 ம் ஆண்டு இன்றைய முதல்வர் மாண்புமிகு  கலைஞர்  அவர்களே  எல்லா விவசாய பாம்பு செட்டுகளுக்கும்  கட்டணமில்லா மின்சாரம் வழங்கினர் . கட்டணமில்லா மின்சாரம்  அமலுக்கு வந்து  22 ஆண்டுகள் ஆனா நிலையில் டிசம்பர் 7 ம் தேதி பத்திரிகைகளில் கட்டணமில்லா மின்சாரம்  எப்போதும் தோட்டகலை பயிர்களான கொய்யா ,முந்தரி ,முருங்கை போன்ற பயிர்களுக்கு வழங்கப்படவில்லை . நெல், கரும்பு போன்ற பயிர்களுக்குத்தான் வழங்கப்படுகிறது என்ற புதுகுண்டை தூக்கிபோட்டுள்ளர். இப்போது தென்னையும்  தோட்டக்கலை பயிர் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது. இலவச மின்சாரம் எல்லா பயிர்களுக்கும்  நீர்பாய்ச்ச விவசாய பம்பு செட்டுகளுக்கு  வழங்கப்பட்டதுதான் என்று முதல்வரே அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும்.<br />
          இந்தியாவில் வேறெந்த மாநிலமும் கொண்டுவர நினைக்காத வேளாண்  மன்ற சட்டத்தை  இயற்க்கை விவசாயத்தையும் , அதற்க்கு ஆதரவாக பேசுவோரையும் முடக்க கொண்டு வர உத்தேசித்திருந்த  சட்ட முன் வடிவு ஒத்தி வைக்கப்பட்டாலும் இன்னும் தலைக்கு மேலே கத்தியகத்தன் தொங்கிக்கொண்டிருக்கிறது. அப்படி ஒரு சட்டம் எப்போதும் வராது  என மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் .<br />
                விதை ,உரம் ,பூச்சி மருந்து அனைத்திலும் கலப்படம் செய்து விற்கப்படுவதை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கும் போக்கே தொடர்கிறது . வெங்காய விலை விண்ணை தொட்டு விட்டதாக விடிந்தால் அலறும் நடுவண் மற்றும் மாநில அரசுகள் அதை விளைவித்து கொண்டு வருபவர்கள் விவசாயிகள்தான் என்பதை மறந்து அதற்கான விதைகளை கூட வேளாண்துறை , தோட்டக்கலைத்துறை மூலமாக விவசாயிகளுக்கு கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . விலைவாசியை குறைக்கவேண்டும் என்பதில் உள்ள அக்கறை விளைபொருள் விளைச்சல் அதிகரிக்க விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதில் இல்லை. சம்பள உயர்வுகளை சண்டமாருதமாக வழங்கும் அரசு விவசாயிகள் கடன் சுமையில் தத்தளிப்பது பற்றி கவலைப்படவில்லை .<br />
    சிறு குறு விவசாயிகளே   பெரும்பான்மையினராக  உள்ள நமது நாட்டில்   விவசாய வேலைக்கு இன்னும் அதிக அளவில்  இயந்திரத்தை பயன்படுத்தும் காலகட்டம் இன்னும் வரவில்லை. மகாத்மா காந்தி  ஊரக வேலை வாய்ப்புதிட்டம்  என்ற பெயரால் விவசாய வேலைக்கு வந்த ஆட்களை  குட்டைகளில் உட்கார வைத்துகொண்டு  ரூ. 130  கொடுக்கும் அரசு , விவசாயம் செய்ய முடியாமல் விளை நிலத்தை  வீட்டு மனைகளுக்கும்  காற்றாலை  மின்சாரத்திக்கும் விற்கும்  நிலைக்கு விவசாயிகளை தள்ளி உள்ளது.  இயந்திரம் கொண்டு குறைந்த செலவில் செய்யும் குட்டை , கால்வாய்கள் ,சாலைகள் செப்பனிடும் பணியில் விவசாய தொழிலாளர்களை அமர்த்திக்கொண்டு ஆட்களைக்கொண்டே செய்யவேண்டிய விவசாய வேலைக்கு தன்னால் அமர்த்த முடியாத சூழ்நிலையிலும்  விவசாயிகள் கட்டாயமாக இயந்திரங்களை பயன்படுத்தி நஷ்டமடையும் நிலைக்கு விவசாயிகளை தள்ளி உள்ளது   . விவசாய விளைச்சல் இல்லாததாலேயே விவசாய விளை பொருட்கள் விலை உயர்ந்துள்ளதை அரசு ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறது . ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை விவசயத்திக்கும் பயன்படும் திட்டமாக மாற்றியமைக்க இந்த ஆர்ப்பாட்டத்தில்  கோரிக்கை வைக்கிறோம் .<br />
                                    விவசாய உற்பத்தி அதிகரிப்புக்கும் நிலவள மேம்பாட்டிக்கும் உதவ உள்ள அரசு துறைகளான வேளாண்துறை , தோட்டக்கலைத்துறை , வேளாண் பொறியியல் துறை , பொதுப்பணித்துறை , பால்வளத்துறை , விதை சான்றளிப்புத்துறை , கூட்டுறவுத்துறை ,ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள்   , கூட்டுறவு விவசாய விற்பனை நிலையங்கள் ,அரசு   விதைப்பண்ணைகள் அனைத்தும்  செயலிழந்த நிலையில் இயந்திர தனமான முறையில் உண்மைக்கு புறம்பான புள்ளி விவரங்களை அரசுக்கு கொடுத்து அரசையும் , மக்களையும் ஏமாற்றி வரும் துறைகளாகவே உள்ளன. வேளாண்மையில் நீர் சிக்கனம் ,ஆட்குறைப்பு ,மகசூல்  அதிகரிப்பிற்கு  உதவும் சொட்டுநீர் , தெளிப்பு நீர் , பசுமைக்குடில்களுக்கு ஒதுக்கப்படும் மானியங்களை அந்தந்த துறை அதிகாரிகள் கபளீகரம் செய்து கொண்டு இருப்பதையும் அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை. 40% விவசாயிகள் தொழிலை விட்டு விட தயாராகி விட்டார்கள் . அடுத்த தலைமுறை விவசாயம் செய்ய விவசாய குடும்ப  இளைஞர்கள் யாரும்  விவசாய பணியில் இல்லை. 100 கோடி மக்களுக்கு மேல் உள்ள ஒரு நாட்டில் உணவுப்பாதுகாப்பே  ஆபத்தில் உள்ளது . கும்பகர்ண தூக்கத்தில் உள்ள மத்திய மாநில அரசுகளை  விழிப்படைய செய்யவே  இந்த ஆர்ப்பாட்டம் .<br />
         கட்டுமான பொருட்கள் விலை , பெட்ரோல் , டீசல் விலை ,இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள்  விலை , ஆடை அணிகலன் விலை குறிப்பாக தங்கத்தின் விலை ,உணவுக்கூடங்களில் தின்பண்டங்கள் விலை ,காபி, தேயிலை விலை , வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தின் விலையும் கடந்த ஓராண்டிக்கும் மேலாக பன்மடங்கு உயர்ந்துள்ளது. இது பற்றியெல்லாம் யாரும் அதிகமாக பேசுவதும் இல்லை போராடுவதும் இல்லை. விமான கட்டணங்கள் அதிகரித்தாலும் விமானப் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . கல்வி கட்டணம் அதிகரித்தாலும் ,கல்வி கற்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . டீசல் ,பெட்ரோல் விலை உயர்ந்தாலும் வாகனங்கள் உற்பத்தியும் , அதை வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இவற்றுக்கெல்லாம் போராடாத அமைப்புகள், அரசியல்   கட்சிகள் , நுகர்வோர்    விவசாயம் உற்பத்தி பொருட்களான வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள், முட்டை, இறைச்சி ,தானியங்கள் ,பால் ,என உண்ணும் பொருள் விலை உயர்வை மட்டும் சகித்துக்கொள்ளாமல் போராடுகிறார்கள். விவசாயத்திக்கும் கட்டுமான பொருட்கள் ,இயந்திரங்கள், ட்ராக்டர் போன்ற வாகனங்கள் விலை , ஆட்கூலி ,விதை , உரம் , பூச்சி பூஞ்சான மருந்துகள் என எல்லாமே உயர்ந்து விட்ட பிறகு விளை பொருட்களை எப்படி மலிவாக   எதிர்பார்க்கிறார்கள் . விவசாயம் செய்வோர் லாபம் பார்க்க கூடாதா? பணம் சம்பாதிக்க கூடாதா?<br />
                 பாலுக்கு விளை கேட்டு பல ஆண்டுகள்   போராடினால் பாட்டிலில் அடைத்த பச்சை தண்ணீருக்கு இருக்கும் விலை பாலுக்கு இல்லையே என வாதாடினால் எதோ பிச்சை போடுவது போல ஒரு லிட்டருக்கு ரூ .1.10 காசு உயர்த்துகிறது அரசு. கலப்புத்தீனி தயாரிப்பாளர்கள் மூட்டைக்கு உடனே ரூ. 50, 100 என  உயர்த்திக்கொள்கிறார்கள் . மாட்டு பண்ணைகள் என்று அதிகமாக இல்லை.   மாட்டை மேய்த்து பால் கறந்து பிழைப்பு நடத்தும் கட்டாயத்தில் உள்ள பெண்கள் ,சிறுகுறு விவசாயிகளே அதிகம் உள்ளனர். அவர்கள் பாலுக்கு நல்ல விலை பெற்றால் தானே   அவர்கள் தேவைக்கான மற்ற பொருட்களை   வாங்க முடியும் . ஒரு சராசரி மனித வாழ்வை வாழமுடியும் . எனவேதான் பசும் பாலுக்கு ரூ. 5 -ம் எருமைப்பாலுக்கு ரூ. 8 -ம்  குறைந்த பட்ச கொள்முதல் விலையாக உயர்த்த வேண்டும். ஆவின் பால் கொள்முதல் நிலையங்கள் மூடு விழா  நடத்தாமல் காப்பாற்ற முடியும். பால் கொள்முதல் சங்க பணியாளர்கள் அவர்கள் குடும்பங்கள் அரசு பணியாளர் குடும்பங்களைப்போல பாதுகாப்பான வாழ்வை நடத்த முடியும் .அதற்காகவே பிப்ரவரி 7 -ம் தேதி  முதல் பால் நிறுத்த போராட்டம்.<br />
                                    பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வரும் காண்டூர் கால்வாய் பழுதடைந்து பல ஆண்டுகள் ஆகிறது.   4   மண்டலங்களில்      2.5  ஆண்டுகளுக்கு ஒரு முறை  4  லட்சம் ஏக்கர்  தண்ணீர் பாயும் ஒரே திட்டம்  P.A.P திட்டம் தான். இந்த ஆண்டுதான் காண்டூர் கால்வாயை   செப்பனிட   ரூ. 180 கோடி நிதி ஒதுக்கி  வேலை நடைபெற உள்ளது. அதை ஒப்பந்தத்தில் எடுக்க டெண்டர் கோர வந்த வெளி மாநில   பெரிய நிறுவனங்களிடம் தகறாரு செய்து கமிசன் கேட்டு   மிரட்டி உள்ளார்கள் ஆளும் கட்சியினர் . காண்டூர் கால்வாயை  செப்பனிடும் பணியை கண்காணிக்கும் பொறுப்பு எல்லா பாசன சபைகளுக்கும் உண்டு.  காண்டூர் கால்வாயை   செப்பனிட  ஒதுக்கப்பட்ட பணம் முழுமையாக சென்றடைய பட்டால்தான் P.A.P பாசன பகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும் . ஒப்பந்த புள்ளி கோரி வருவோரை அச்சுறுத்தி கமிசன் கேட்கும் ஆளும் கட்சியினரை அடக்கி வைக்கும் பொறுப்பு அரசுக்கே உண்டு என்பதை  தெரிவித்துக்கொள்கிறோம் .<br />
                                  ஆனைமலையாறு நல்லாறு திட்டம் ,அத்திக்கடவு அவினாசி திட்டம், நதிகள் இணைப்பு திட்டம், காவிரி, முல்லை, பெரியார்,  பாலாறு தடுப்பணை திட்டங்களை கண்காணித்து அரசுக்கு ஆதரவு தரவேண்டிய நேரத்தில் தந்தும், எதிர்க்க வேண்டிய கட்டத்தில் எதிர்த்தும் போரட்ட வேண்டிய பொறுப்பு விவசாயிகளுக்கும், மற்ற அமைப்புகளுக்கும், சங்கங்களுக்கும் உண்டு. அதற்கு இந்த ஆர்ப்பாட்டம் தூண்டுகோலாக  அமையும் .<br />
                           நொய்யலாறு காஞ்சிமாநதியாக  இலக்கியத்தில் பேசி பாராட்டப்பட்ட ஆறு . அது காவிரியில் இணையும் வரை ஆயிரக்கணக்கான பெரிய, சிறிய குளம், குட்டைகளை  நிரப்பி செல்கிறது. கோவை சாக்கடை, திருப்பூர் சாய சலவை பட்டறைகளின் கழிவுகள் நொய்யலில் கலந்து நொய்யல்  பாசன பகுதி விவசாயத்தையே பாழ்படுத்தி  விட்டது.  இன்று வரை கழிவு நீரை சுத்திகரித்து ஆற்றில் விடும் எந்த திட்டமும் வெற்றிகரமாக அமுல் படுத்தப்படவில்லை. 25000  ஏக்கருக்கு மேல் பாசனம் அளிக்க  புரட்சித்தலைவர் M.G.R  காலத்தில் கட்டப்பட்ட ஒரத்துப்பாளையம்  ஆணை  உபயோகமின்றி போனது . தற்போது  கோவை  மாநகருக்கு மேற்காக சித்திரன்னஞ்சாவடி    தடுப்பணைக்கு மேல்  கோட்டைமேட்டு   பகுதியில்  சில பெரும் தொழில் முதலைகள் நட்சத்திர விடுதிகள், உல்லாச கேளிக்கை நிலையங்கள் கட்டும் திட்டத்தில் பெரிய அணையைக்கட்டி  நொய்யலாத்து  தண்ணீர் முழுமையும் தடுக்கும்  திட்டத்தில் இருப்பதை அறிய வருகிறோம். அப்படி ஒரு முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய நொய்யல் பகுதி விவசாயிகளை தட்டி எழுப்பவே இந்த ஆர்ப்பாட்டம்.<br />
                 உலக நாடுகள் எல்லாம் தென்னை பனையில்   கள்   இறக்க   அனுமதி அளித்துள்ளபோது   இந்தியாவில் தமிநாடு நீங்கலாக அனைத்து மாநிலங்களும்  கள் விற்க அனுமதி அளித்துள்ள போது இந்திய அரசியல் சட்டம்  47 வது பிரிவில் மக்கள் உடல் நலனை பாதிக்கும், அதிக போதை தரும் மது விற்பனையத்தான்  தடை செய்ய வேண்டும்  என்று சொல்லி உள்ள  போது  லட்சக்கணக்கான தென்னை பனை விவசாயிகள் தொழிலாளர் வாழ்க்கை பிரச்சனையான கள்ளுக்கு  தடை விதித்து, உயிருக்கும், உடலுக்கும், நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு  விளைவிக்கும் டாஸ்மாக் கடைகளை மூடி பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும். இல்லையேல் தென்னை பனை தொழிலாளர் கோரிக்கையை ஏற்று  கள்ளுக்கு தடையை நீக்க வேண்டும் என்பதே கோரிக்கை.<br />
               வரும் சட்டமன்ற தேர்தலில் மேற்கண்ட விவசாயிகள் கோரிக்கைகளை   ஏற்றுக்கொள்வோரை<br />
 ஆதரித்து வெற்றி பெற செய்யவும், ஏற்க மறுப்போரை தோற்கடிக்கவும், விவசாய அமைப்புகளையும், விவசாய நலம் நாடும் நண்பர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.<br />
  அன்புடன் அழைக்கும் &#8230;&#8230;<br />
 உழவர் காவலன்    N.S.பழனிசாமி M.A. Ex. M.L.A.,<br />
தலைவர். கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்.<br />
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயிடு அறக்கட்டளை<br />
65 காமராஜ்சாலை,           திருப்பூர் .<br />
அலைபேசி -94423 73374 -73733 42779</p>
<p> குறிப்பு: பால் நிறுத்தப்போராட்டம் பிப்ரவரி 7 ம் தேதி நடைபெறுவதை ஒட்டி 3.2.2011 அன்று சூலூரில் கலங்கல் சாலை அரிமா சங்க  கட்டிடத்தில் கோவை  திருப்பூர் பால் உற்பத்தியாளர்கள்  பால் கொள்முதல் சங்க பணியாளர்கள் ஆலோசனைக்கூட்டம் காலை 10.00  மணிக்கு நடைபெறும். </p>
<p>&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;-<br />
கள் போராட்ட காரணங்கள் &#8211; விளைவுகள்</p>
<p style="text-align:center;"><strong>அன்னையின்பால் அன்பிற்கு<br />
தென்னையின் பால் தெம்பிற்கு</strong><br />
என்பது தமிழ் பழமொழி</p>
<p style="text-align:left;">
<p>அன்னையின் பாலுக்கு நிகரான தென்னை பனையின் பாலைத்தான் “கள்” என்ற சுருக்க வார்த்தையில் அழைக்கிறோம். தமிழர் நாகரீகம் மற்றும் பண்பாட்டில் “கள்” ஒரு உபசரிப்பு பானமாக இருந்து வந்தது வரலாறு. நீதி நூல்களை எழுதிய தமிழ் மூதாட்டி ஒளவை பிராட்டிக்கு கடையேழு வள்ளல்களில் ஒருவரான தகடூரை ஆண்ட அதியமான் தன் அரண்மனையில் கள்ளை அருந்தக் கொடுத்து உபசரித்ததை புகழ்ந்து ஒளவையார் பாடிய பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.</p>
<p>தமிழர் ஆட்சி முடிந்து ஐரோப்பாவைச் சேர்ந்த போர்த்து கீசியர், டச்சுக்காரர், பிரஞ்சுக்காரர், இறுதியாக ஆங்கிலேயர், நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட காலத்தில் நமது மண்ணின் பானமான “கள்” மதிப்பை இழந்தது. கள்ளைவிட அதிகம் போதை தரும் ஆல்ஹகாலை உள் அடக்கிய பீர், பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் போன்ற மனுபானங்கள் குடிமக்களிடையே செல்வாக்குப் பெற்றது.</p>
<p>ஐரோப்பியர் அனைவரும் குளிர்பிரதேசத்தில் வாழ்பவர்கள், அவர்கள் வாழ்வில் அதிக ஆல்ஹகால் உள்ள கடின மதுபானங்கள் உடலை வெப்பப்படுத்த உணவின் ஒரு பகுதி போல உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால் நாமோ வெப்பமண்டலத்தில் வாழ்பவர்கள். நமக்கு உடலை குளிர்விக்கும் மென்பானங்கள் தான் தேவை. 4.5% ஆல்ஹகாலைக் கொண்ட “கள்” உழைக்கும் மக்களின் களைப்பைப் போக்கம் ஒரு உற்சாகபானமாக அன்றைய தமிழ் மக்களிடம் இடம் பெற்று இருந்தது. உண்டால் மகிழ்விப்பது கள் என்றார் வள்ளுவப் பெருந்தகை.</p>
<p>அண்ணல் காந்தி அடிகளின் அயராத முயற்சியால் ஆங்கிலேயனிடமிருந்து 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி அரசியல் விடுதலை பெற்ற நாம் ஆங்கில மொழி, ஆங்கில மது, அவர்கள் அறிமுகப்படுத்திய காபி, தேநீர், சுருட்டு, புகையிலை, பீடி, சிகரெட்டுக்கு நிரந்தர அடிமைகளாகிவிட்டோம், சுதேசி பானமான “கள்” ஏதோ தீண்டத்தகாத அநாகரீக பானம் என்று நினைக்கும் நிலைக்கு வந்துவிட்டோம் 5000000 தென்னை, பனைவிவசாயிகள், 1000000 மரமேறும் தொழிலாளர்கள் வாழ்வின் ஜீவாதார பிரச்சினை “கள்” என்பதை தமிழ்நாடு மறந்துவிட்டது.</p>
<p>உலகின் தென்னை பனை உள்ள நாடுகளில் எல்லாம், இந்தியாவில் தமிழ்நாடு தவிர்த்து எல்லா மாநிலங்களிலும் “கள்” இறக்க, விற்க, குடிக்க சட்டரீதியாக தடை ஏதும் இல்லை. 5 கோடி தென்னை மரங்களும் அதே அளவு பனை மரங்களையும் இயற்கை செல்வமாக பெற்றுள்ள தமிழகத்தில் மட்டும் 1-1-1987 முதல் கள் இறக்க, விற்க, குடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானமான சீமைச்சாராய விற்பனை சிவப்புக்கம்பள வரவேற்புடன் நடைபெறுகிறது. 4000 உணவு பொருள் வழங்கும் கடைகளை திறந்துள்ள தமிழ்க அரசு 8000 மதுக்கடைகளை திறந்துவைத்துள்ளது. மதுபான பாட்டில்களில் ”மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடுவிளைவிப்பது” என எழுதி எச்சரிக்கை செய்து அதையும் அரசே நேரடியாக விற்கிறது. அரசு வாணிபம் செய்தால் மக்கள் பிச்சைக்காரர்கள் ஆவார்கள் என்பது ஆன்றோர் கருத்து.  அரசு மதுபான வியாபாரம் செய்தால் மக்கள் பிச்சைக்காரர்கள் மட்டுமல்லாமல் நோயாளிகளாகவும் ஆவார்கள் அது தான் இன்றைய தமிழ் மக்களின் நிலை.</p>
<p>நமது இந்திய அரசியல் சட்டத்தின் 47 வது பிரிவு அரசின் கடமையாக சொல்வது மூன்று. ஒன்று மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், இரண்டாவது உடல் நலம் காத்தல், மூன்றாவது மக்களை நல்ல குடிமகனாக வாழவைத்தல். இந்த நோக்கங்களை அடைய அதிக போதைக்கு காரணமான கடின மதுபானங்களை தடை செய்யவேண்டும். மருத்துவ காரணங்களுக்கு தேவைப்படுவோருக்கு மட்டும் அதை அனுமதிக்கவேண்டும். தமிழக அரசின் 1937ம் ஆண்டின் அன்றைய மது விலக்கு சட்டத்திலும் உடல் நலத்திற்கு உதவக்கூடியதும், மருத்துவரீதியாக நன்மை விளைவிக்கும் கள்போன்ற இயற்கை மது விற்பனைக்கு அந்த அந்த மாவட்ட ஆட்சித்தலைவரே உரிமம் வழங்கி உதவலாம் என சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்த்தால் தடை செய்யப்பட வேண்டியது இந்தியாவில் தயாரிக்கப்படும் மேலைநாட்டு மதுபானங்களே!  தாராளமாக உரிமை கொடுத்து அனுமதிக்க தகுதியானது பனை தென்னையிலிருந்து இறக்கப்படும் கள்ளே!</p>
<p>இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்கள் சர்க்கரை ஆலையிலிருந்து சர்க்கரை போக வெளியேறும் ரசாயனங்கள் கலந்த கழிவுப் பொருளான மொலாசசிலிருந்து வடித்து எடுக்கப்படும் 100% ஆல்ஹகால் உள்ள நூட்ரல் ஆல்ஹகால் என்ற எரிசாராயத்தில் இரண்டுமடங்கு நீரைக்கலந்து குடிசாராயமாக மாற்றுகிறார்கள். பீர், பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், என்ற மது வகைகளின் சுவைக்கு தகுந்த நிறமிகளை கலந்து கவர்ச்சிப் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.</p>
<p>பொள்ளாச்சி அருட்ச்செல்வர் டாக்டர் N. மகாலிங்கம் அவர்கள் பல சர்க்கரை ஆலைகளின் தலைவர். அவரது உறவினர் மதுபான ஆலை உரிமையாளராகவும் உள்ளார். அருட்ச்செல்வரை ஆசிரியராகக்கொண்ட ஓம் சக்தி டிசம்பர் மாத இதழில் அவரே மதுபான தயாரிப்பு செலவு லாபம் பற்றி ஒரு கணக்கு கொடுக்கிறார். ஒரு லிட்டர் பிராந்தி தயாரிக்க ஆகும் செலவு ரூ 9 அதை அடைக்க பாட்டிலிற்கு ஆகும் செலவு ரூ 3 ஆக மொத்த செலவு ரூ 12. ஆனால் அரசு மதுபானக் கடைகளில் 750 மில்லி புல் பாட்டில் பிராந்தியின் விலை ரூ380-00 இந்த பகல் கொள்ளையை பங்கு போட்டுக்<br />
கொள்பவர்கள் 9 சீமைச்சாராய தாயரிப்பாளர்கள். அவர்களுக்கு துணைபோகும் ஆளும் அரசியல் வாதிகள், விற்பனை செய்யும் அரசு யார் எந்தெந்த விகிதாசாரத்தில்  பங்கு  பிரித்துக் கொள்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். அரசுக்கு கிடைக்கும் இந்த சீமைச்சாராய வருமானம் மக்களை குளிர்விக்க இலவசங்களை வழங்க உதவுகிறது.  ஆளும் அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் அபரிதமான மதுபான பணம், ஏழை வாக்காளர்களை வசியப்படுத்த பணம் பாட்டில் என்ற வடிவத்தில் உதவுகிறது.</p>
<p>ஜனநாயகத்தை கொண்டுவர நடத்தப்படும் தேர்தலில் பாட்டில் பணநாயகமே வெற்றி பெறுகிறது. பதவியால் பணம், பணத்தால் பதவி, வட்டச்சுற்று தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாய்விற்ற பணம் குறைக்காது என்ற பழமொழிக் கேற்ப சீமைச்சாராய சக்கரவர்த்திகளிடம் சேரும் பணம் அவர்களை உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏலுமலையானுக்கும், பழனி முருகனுக்கும் தர்க்கார் பதவிகளை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.</p>
<p>உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சீமைச்சாராய விற்பனையாளர்கள் சீமான்களாக வாழும் போது, உடலுக்கு நன்மைபயக்கும் இயற்கை மதுபான கள்ளை தன்னகத்தே கொண்டுள்ள தென்னை பனை உரிமையாளர்கள் கடனில் தத்தளிக்க வேண்டுமா? அனைத்து பொருட்களும் முப்பது ஆண்டில் 10 மடங்கு விலை உயர்வை அடைந்த போது தேங்காய் மட்டும் ரூ.5 தாண்டாமலேயே உள்ளது ஏன்?  1992-ல் ஒரு கிலோ கொப்பறை ரூ.52க்கு விற்றது.  2009ல் வெறும் 30க்கே  விற்கிறதே நியாயமா?  தேங்காயையும், இளநீரையும் தென்னையிலிருந்து இறக்கி விற்க உரிமை பெற்றுள்ள விவசாயிகள் கள்ளை மட்டும் மதுபான பட்டியலில் இருந்து நீக்கி உணவின் ஒரு பகுதியாக அறிவித்து தென்னை பனை விவசாயிகள் மரம் ஏறும் தொழிலாளர்கள் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வர 10 ஆண்டுகளாக வைத்த கோரிக்கைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகப் போன காரணத்தால் தான் தமிழ்நாடு கள் இயக்கம் தடையை மீறி கள் இறக்கி விற்கும் முடிவிற்கே வந்தது.</p>
<p>தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ. நல்லசாமி, M.A.B.L. அவருக்கு உறுதுணையாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் N.S. பழனிசாமி  M.A.,Ex.M.L.A.  மற்றும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான விவசாய சங்கங்கள் மரமேறும் தொழிலாளர்கள் இணைந்து செப்டம்பர் 16-ம் தேதி தமிழக அரசின் தடையை மீறி சென்னை சேப்பாக்கத்தில் உண்ணா நிலை போராட்டம்                                                                        மேற்கொண்டு தமிழக அரசின் தடையை மீறி ஜனவரி 21-ம் தேதி கள் இறக்கி விற்பது என தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தது.  ம.தி.மு.க., பாரதி ஜனதா, ச.ம.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளும் உண்ணா நிலை போராட்டத்தில் கலந்து ஆதரவளித்தார்கள்.  தடையை மீறி கள் இறக்கி விற்கும் தீர்மானம் தமிழக கிராமங்களில் ஆதரவு அலையை ஏற்படுத்தியது.  கட்டணமில்லா மின்சாரம் பெறவும்,கடனை தள்ளுபடி பெறவும் ஒருங்கிணைந்த விவசாயிகள் உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடு மறைவுக்கு பின் கள் போராட்டத்தில் தான் அனைவரும் கைகோர்த்தார்கள்.  விதேசிபானமாக சீமைச்சாராயத்திற்கு சிவப்புகம்பள வரவேற்பு, சுதேசிபானம் கள்ளுக்கு கடுமையான கைவிலங்கு கொள்கைக்கு முடிவுகட்ட துவங்கப்பட்டதே 2009 ஜனவரி 21ல் துவங்கிய கள் இறக்கும் போராட்டம், சுதந்திர போராட்ட காலத்தில் காந்தியடிகளும், மற்ற தலைவர்களும் வெள்ளையர் ஆட்சி கொண்டு வந்த அடக்கு முறை சட்டங்களை மீறியே போராடினார்கள்.  அப்படி ஒரு போராட்டமே காந்தியடிகள் நடத்திய உப்பு சத்தியாகிரகம்.  உப்பு சத்தியாகிரகம் போன்ற ஒரு போராட்டமே ஜனவரி 21-ல் கள் இயக்கம் துவங்கிய கள் இறக்கும் உரிமை கோரும் சட்டமறுப்புப் போராட்டம்.</p>
<p>ஜனவரி 21 அன்று தமிழகமெங்கும் தடையை மீறி கள் இறக்கி விற்று லட்சக்கணக்கான விவசாயிகள் மரமேறும் தொழிலாளர்கள் கைதாகி விடுதலை ஆனார்கள்.  அன்றையிலிருந்து இன்று வரை கள் இறக்கி விற்பது பல அடக்கு முறை இன்னல்களுக்கு இடையிலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மரமேறும் தொழிலாளர்களால் தொடர்ந்து நடந்துவருகிறது.</p>
<p>கடந்த 130 நாட்களாக நடந்து வரும் கள் இறக்கி விற்கும் போராட்டம் கிராமப் பொருளாதாரத்தில் ஒரு புரட்சிகரமாற்றத்தை தோற்றுவித்துள்ளது.  ஆயிரம் தேய்காயை விற்ற அடுத்த நாளே கடனுக்கு அலைந்த விவசாயிகள் 50 தென்னையில் கள் இறக்கி விற்க துவங்கியதும் நாள் ஒன்றுக்கு ரூ.1000-த்திலிருந்து ரூ.5000- வரை வருமானம் பெற்று வருகிறார்கள்.  கள் இறக்க கட்டாயம் தேவைப்படுவது மண் கலையம் மண் பாண்டத் தொழில் மரணத்தில் இருந்தது அதற்கு புத்துயிர் கொடுத்தது கள் இயக்கம்.  பல்லாயிரக்கணக்கில் மண் கலையங்கள் தேவைப்பட்டதால் ரூ.10-க்கு கிடைத்து வந்த மண்கலையத்தின் விலை ரூ.40- ஆகிவிட்டது.  மண்பாண்ட தயாரிப்பாளர்கள் வாழ்வில் வசந்தம் வந்தது.  பாளை சீவும் கத்தி, தயாரிப்பு தொழில் நின்று போய் இருந்தது.  கள் போராட்டம் துவங்கிய போது ரூ.250-க்கு விற்ற கத்தி விலை ரூ.1000- ஆனது.  ஏணி தயாரிக்கும் தச்சர்கள் ஏணி விலை ரூ.100-லிருந்து ரூ.500-க்கு உயர்த்தி விற்றார்கள்.  கேரளம், கர்நாடகம், ஆந்திரா என பிழைப்பு தேடி சென்ற மரமேறும் தொழிலாளர்கள் அங்கு லிட்டருக்கு ரூ.3  மட்டுமே அதிக பட்சமாக கூலி பெற்று வந்தார்கள்.  ஜனவரி21-ல் கள் இறக்க தமிழ்நாடு திரும்பியவர்கள் லிட்டருக்கு ரூ.10- ஊதியமாய் பெற்று ரூ.300-ல் இருந்து ரூ.500- வரை ஊதியம் பெற்று வருகிறார்கள்.  உடலுக்கும், உயிருக்கும் கேடு விளைவித்து வந்த சீமைச்சாராயத்தை டாஸ்மாக் கடைகளில் 180 மில்லிக்கு ரூ.75  கொடுத்து சாக்னா கடைக்கு ரூ.25  கொடுத்து ரூ.100  கூலி பெற்றும் வெறுங்கையோடு தள்ளாட்டம் போட்டு வீடு திரும்பிய தொழிலாளி இன்று ஊட்டச்சத்துள்ள ஒரு லிட்டர் “கள்ளை” ரூ.30-க்கு குடித்துவிட்டு ரூ.70  மீதமாக கொண்டு வந்து வீட்டுக்கு கொடுக்கிறார்கள்.  சீமைச்சாராயத்திற்கு செலவளித்த பணம் கிராமத்தை விட்டு வெளியேறியது.  கள்ளுக்கு கொடுத்த பணம் கிராமங்களிலேயே உலா வந்து கொண்டு உள்ளது.<br />
நடுவண் அரசின் ஆண்டுக்கு 100 நாள் வேலை உறுதி திட்டமோ தமிழக அரசின் ரூ.1-க்கு 1 கிலோ அரிசி திட்டமோ செய்யாத பொருளாதார மாற்றத்தை கள் இயக்கம் கொண்டு வந்துள்ளது.  மதுவை வெறுத்த மகாத்மா கூட இன்று உயிரோடு இருந்தால் கள்ளை வரவேற்று இருப்பார்.  புளிக்காத கள் சத்தான உணவு என அவரே சான்றளித்தும் உள்ளார்.</p>
<p>நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கள்ளை ஆதரித்து பேசாத அரசியல் வாதிகளே இல்லை என்ற நிலை உருவானது.  கள்ளை சொன்னாலே பெண்கள் வாக்கு விழாது என்ற கற்பனையில் இருந்த அரசியல்வாதிகள் கள்ளைச் சொன்னால் தான் பெண்கள் வாக்கு விழும் என்ற உண்மையைத் தெரிந்து கொண்டுள்ளார்கள்.</p>
<p>நாள் கூலி ரூ.100 சம்பாதிக்கும் தொழிலாளி 30க்கு கள் குடித்து விட்டு ரூ.70 தனது மனைவியிடம் கொடுத்தான்.  ரூ.1000- கள் விற்ற விவசாயி அதை தனது வீட்டம்மாளிடம் கொடுத்தார்.  ரூ.500- ஊதியம் பெற்ற மரமேறும் தொழிலாளியின் மனைவியே பெரும்பாலும் கள் விற்க பணிக்கப்படுவதால் அவர்கள் முந்தானையிலேயே பணம் வந்து விழுகிறது.  கள் இறக்கும் போராட்டம் பெண்களுக்கும் பொருளாதார சுதந்திரத்தை தந்துள்ளது.  மாண்புமிகு முன்னாள் இன்னாள் முதலமைச்சர்களே கள்ளை ஆதரித்து கருத்துச் சொல்லிவிட்டார்கள்.</p>
<p>கள் இயக்கம் கோருவது கள்ளுக்கு தடையோ, கடையோ வேண்டாம் என்பது தான்.  கள்ளுக்கடையால் கலப்படம் பெருகும்.  இடைத்தரகர்கள் கொள்ளையடிப்பார்கள்.  கள்ளை ஒரு நிர்ணய விலைக்கு அரசே கொள்முதல் செய்து பெப்சி கொக்கக்கோலா போல் பாட்டிலில் அடைத்து டாஸ்மாக் கடைகளில் விற்கலாம்.  இந்தியாவில் தென்மாநிலங்களில் தான் தென்னை பனை உள்ளது.  பாட்டிலில் அடைக்கப்பட்ட கள்ளை தென்னை பனை இல்லாத மாநிலங்களுக்கும் அரேபியா, வளைகுடா போன்ற வெப்பமண்டல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.  கள்ளையே மூலப்பொருளாக பயன்படுத்தி உலகதரம் வாய்ந்த வொயின், விஸ்கி, பீர் போன்ற மதுபானங்களை தயாரித்து மதிப்பு கூட்டி விற்கலாம்.  இப்படிப்பட்ட மதுபான தயாரிப்பு உரிமையை அரசு தென்னை பனை விவசாயிகள் மரமேறும் தொழிலாளர்களுக்கே தரவேண்டும்.  நாம் பெட்ரோல், டீசல் இறக்குமதிக்கு செலவிடும் அன்னிய செலவாணியை கள்ளை மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்வதன் மூலம் பெறலாம்.  இந்த இயற்கை மதுபான தயாரிப்பின் மீது விதிக்கப்படும் வரி வருமானம் அரசிற்கு கிடைக்கும்.  தமிழகத்தின் ஒட்டு மொத்த கிராமமும் பொருளாதார வளம் பெரும்.  கிராம சுயராட்சியம் என்ற அண்ணல் காந்தி அடிகளின் கனவு நினைவாகும்.  கள் இயக்கப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தாரீர் என அன்புடன் கோரிக்கை வைக்கும்.<br />
உழவர் காவலன்<br />
N S . பழனிசாமி M .A . Ex . M .L .A .<br />
தலைவர் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்</p>
<p>மருத்துவர்.தங்கராஜ். M.B.B.S. DCH.<br />
கோவை மாநகர் மாவட்டத் தலைவர்</p>
<p>A.Ku.சண்முகம்<br />
கோவை மாவட்டத்தலைவர்</p>
<p>சதாசிவம்<br />
மாவட்ட பொதுச் செயலாளர்</p>
<p>கண்ணம்பாளையம் பொன்னுசாமி<br />
மாவட்டச் செயலாளர்</p>
<p>K.K. சந்திரசேகரன்<br />
கோவை மாவட்ட இளைஞர் அணித்தவைலர்</p>
<p>A. காளிமுத்து<br />
 திருப்பூர்மாவட்ட தலைவர்</p>
<p>மார்கெட். G.S. மணி<br />
திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர்</p>
<p>K.P. சண்முகசுந்தரம் தலைவர்<br />
திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கம்</p>
<p>கிரி-கிருஷ்ணன்-செல்வராசு<br />
சுப்பிரமணியம்</p>
<p>சக்திவேல்-ஈரோடு மாவட்ட அமைப்பாளர்<br />
மற்றும் கள் இயக்க நண்பர்கள்</p>
<p>தலைமை அலுவலகம்<br />
உழவாலயம் உழவர் பெருந்தலைவர்<br />
நாராயணசாமி நாயுடு அறக்கட்டளை<br />
65, காமராஜர் சாலை, திருப்பூர்.<br />
செல்: 9442373374 போன்: 2236788</p>
<p><strong>குறிப்பு:</strong></p>
<p style="text-align:center;">உழவனின் முதல் பொருளாதார<br />
விடுதலை போராட்டத்தில்<br />
19.6.1970 அன்று பெருமாநல்லூர்<br />
துப்பாக்கி சூட்டில் உயிர்<br />
நீத்த உழவர் இன போராளிகள்<br />
ஆயிக்கவுண்டர்,<br />
ராமசாமிக்கவுண்டர், மாரப்பக் கவுண்டர்<br />
நினைவு அஞ்சலி<br />
கூட்டம் 19.6.2009 அன்று<br />
காலை 10.00 மணியளவில்<br />
பெருமாநல்லூர் பெருந்துறை<br />
சாலையில் உள்ள தியாகிகள்<br />
நினைவு தூண் முன்பு நடைபெறும்.<br />
<strong>அனைவரும் திரண்டு வருக !<br />
ஆதரவு தருக !</strong></p>
<p style="text-align:center;">சிங்கள இனவெறி<br />
பேரினவாத அரசை எதிர்த்து<br />
போராடி வீரமரணம்<br />
அடைந்த வீரர்கள் மற்றும்<br />
தமிழ் ஈழ மக்களுக்கு உழவர்<br />
பெருமக்கள் சார்பில்<br />
அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.</p>
<p style="text-align:center;">வீரர்கள் புதைக்கப்படுவது இல்லை<br />
விதைக்கப்படுகிறார்கள் !<br />
வீரம் சாவதில்லை<br />
வீறுகொண்டு மீண்டும் எழும் !<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;<br />
     பெருமாநல்லூர் தியாகிகள் தின அஞ்சலி கூட்ட அழைப்பு<br />
                                                 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்<br />
கள் இறக்குவோரை காவல்துறை கண்டு கொள்ளவே இல்லை. உழவர்கள், மரமேறும் தொழிலாளர் வாக்கை வாங்க ஆட்சியாளர்கள் காவல்துறைக்கு கட்டுப்போட்டு வைத்திருந்தார்கள். உழவர்களையும், மரமேறும் தொழிலாளர்களையும் குளிர்விக்க கள் ஏழைகளின் சோர்வை நீக்கும் மலிவான டானிக் விவசாயிகள் அமைதிவழியில் போராடுகிறார்கள் என்றெல்லாம் புகழ்மாரி பொழிந்த மாண்புமிகு தமிழக முதல்வர்.<br />
                                                    தேர்தலுக்கு பின்<br />
கள் இறக்குவோர், கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த மறுகணம் காவல்துறை கட்டவிழ்த்து விடப்பட்டு தென்னை விவசாயிகள், மரமேறும் தொழிலாளர்களை ஏதோ நக்சலைட் தீவிரவாதிகள் போல கருதி நூற்றுக்கணக்கான காவலர்கள் உயர் அதிகாரிகள் படை சூழ கிராமங்களுக்கு வந்து கள்முட்டி உடைக்க கள் பானையை கவிழ்த்து விட, கள் இறக்கிய விவசாயிகளையும், தொழிலாளர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க கள் இயக்க தலைவர்கள் மீது பிணையில் வரமுடியாத சட்டப்பிரிவுகளில் பொய் வழக்கு போட என கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட கிராமங்களே போர்கள சூழ்நிலையில் அச்சத்தில் நடுங்கிக் கொண்டுள்ளது.</p>
<p>உழவர்கள், மரமேறும் தொழிலாளர்கள், நுகர்வோர் ஆதரவாளர்கள் வாக்கை குறி வைத்து கள்ளுக்கு தடை நீக்க ஆதரவ அளிப்போம் என வாக்குறுதிகளை வாரி வழங்கிய எல்லா கட்சி வேட்பாளர்களும், தலைவர்களும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்களா, தலைமறைவு ஆகிவிட்டார்களா என தெரியவில்லை.<br />
இன்னும் இரண்டே ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதற்கிடையில் பல தொகுதிகளில் இடைத்தேர்தலும் வருகிறது. இப்போது ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. சீமைச்சாராயம் தாய் பாலுக்கு நிகரான கள்ளை தடை செய்து கொக்கரிக்கிறது.<br />
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் தர்மமே வெல்லும் !<br />
முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் நம்மை சிறை பிடிக்கும் !<br />
எழுந்து நடந்தால் எரிமலையும் நமக்கு வழிகொடுக்கும் !<br />
தூங்கிக் கிடந்தால் பகலும் நமக்கு இரவாகும் !<br />
விழித்து எழுந்தால் இரவும் பகலாகும் ! போராடினால் உண்டு பொற்காலம் !<br />
போராட்டமே வாழ்வின் உற்சாகம் !<br />
உழவர்களின் முதல் பொருளாதார விடுதலைப் போரில் உயிர்நீத்த உத்தம தியாகிகள் கட்டணமில்லா மின்சாரம்-கடன் தள்ளுபடி கிடைக்க 19.06.1970 அன்று துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த உத்தம தியாகிகள்:<br />
ஆயிக்கவுண்டர், ராமசாமிக் கவுண்டர், மாரப்ப கவுண்டர்<br />
நினைவாக பெருமாநல்லூர் கிழபுறம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நினைவுத்தூண் முன் 19.06.2009-வெள்ளிக் கிழமை காலை 10.00 மணிக்கு ஆயிரக்கணக்கில் கூடுவோம். கள்ளுக்கு தடை நீக்கும் போராட்டம் தொடர சபதம் ஏற்போம். அனைவரும் திரண்டு வாரீர் ! ஆதரவு தாரீர் !<br />
அன்புடன் அழைக்கும்<br />
உழவர் காவலன்<br />
N.S.பழனிசாமி M.A. Ex. M.L.A. மாநிலத் தலைவர்<br />
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்.<br />
மருத்துவர்.தங்கராஜ். M.B.B.S. DCH. கோவை மாநகர் மாவட்ட தலைவர்<br />
A.Ku.சண்முகம் கோவை மாவட்ட தலைவர்<br />
சதாசிவம், மாவட்ட பொதுச் செயலாளர்<br />
K.K. சந்திரசேகர், மாவட்ட இளைஞர் அணி தலைவர்<br />
கண்ணம்பாளையம் பொன்னுச்சாமி, மாவட்ட செயலாளர்<br />
குள்ளப்பகவுண்டர், மாவட்டப் பொருளாளர்<br />
தங்கவேலு, மாநகர் மாவட்டச் செயலாளர்<br />
பூராண்டம்பாளையம் மணி மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்<br />
A. காளிமுத்து தலைவர், திருப்பூர் மாவட்டம்<br />
வெறுவேடம்பாளையம் ராசு, திருப்பபூர் மாவட்டச் செயலாளர்<br />
சாமிக்கண்ணு, திருப்பபூர் மாவட்டப் பொருளாளர்<br />
மார்க்கட் G.S. மணி, திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர்<br />
அர்ஜுனன், திருப்பூர் மாநகர மாவட்டச் செயலாளர்<br />
பீட்டர் ஜெயராஜ், திருப்பூர் மாநகர மாவட்டப் பொருளாளர்<br />
K.P. சண்முகசுந்தரம், திருப்பபூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கத்<br />
தலைவர்<br />
C.P. ஈஸ்வரன், திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க<br />
செயலாளர்<br />
சதீஸ்குமார், திருப்பூர் மாவட்ட இளைஞர் அணித்தலைவர்<br />
கவிஞர் சோழவலசு ஜெயராம் மாநில கொள்கை பரப்பு செயலாளர்<br />
பல்லடம் மாரப்பன் தொழிலாளர் பிரிவுத் தலைவர்<br />
கிரி. செல்வராஜ், கிருஷ்ணன், சக்திவேல், சுப்பிரமணியம்<br />
ஈரோடு மாவட்ட அமைப்பாளர்கள்<br />
(குறிப்பு: ஜுலை 5ம் தேதி உழவர் தின கோரிக்கை பேரணி மாநாடு<br />
திண்டுக்கல்லில் நடைபெறும்)<br />
தலைமையக முகவரி:<br />
உழவாலயம் உழவர் பெருந்தலைவர்<br />
நாராயணசாமி நாயுடு அறக்கட்டளை 65 காமராஜர் சாலை,திருப்பூர்<br />
போன்: 0421-2236787 செல்: N..P.9442373374<br />
கள் இயக்க தலைவர்கள் செல்போன் எண்கள்: 9789511777,9894099955, 9442016138,<br />
9363125002, 9443820845, 9842257465, 9843010554, 9443063950, 9443366650</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/thennaitamilnadu.wordpress.com/37/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/thennaitamilnadu.wordpress.com/37/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/thennaitamilnadu.wordpress.com/37/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/thennaitamilnadu.wordpress.com/37/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/thennaitamilnadu.wordpress.com/37/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/thennaitamilnadu.wordpress.com/37/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/thennaitamilnadu.wordpress.com/37/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/thennaitamilnadu.wordpress.com/37/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/thennaitamilnadu.wordpress.com/37/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/thennaitamilnadu.wordpress.com/37/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/thennaitamilnadu.wordpress.com/37/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/thennaitamilnadu.wordpress.com/37/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/thennaitamilnadu.wordpress.com/37/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/thennaitamilnadu.wordpress.com/37/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thennaitamilnadu.wordpress.com&amp;blog=7126894&amp;post=37&amp;subd=thennaitamilnadu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://thennaitamilnadu.wordpress.com/2009/06/15/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/fefd5c3a8e5f2be9345e0f4ba11cbd37?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thennaitamilnadu</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நாங்கள் ஏன் கள் இறக்க வேண்டும்?</title>
		<link>http://thennaitamilnadu.wordpress.com/2009/06/09/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3/</link>
		<comments>http://thennaitamilnadu.wordpress.com/2009/06/09/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3/#comments</comments>
		<pubDate>Tue, 09 Jun 2009 13:55:53 +0000</pubDate>
		<dc:creator>thennaitamilnadu</dc:creator>
				<category><![CDATA[C.P.Eswaran]]></category>

		<guid isPermaLink="false">http://thennaitamilnadu.wordpress.com/?p=10</guid>
		<description><![CDATA[                        முதல் பதிவு:-                       ரஷ்யாவில் ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டின் தலைப்பு உலகிலேயே எந்த நாட்டுத் தாய் மிகச் சிறந்தவள் என்ற கருத்தாய்வு நடந்தது. அதில் எத்தனையோ நாட்டுத் தாய்களின் கருணையைப் பட்டியலிட்டுப் பார்த்து விட்டு இறுதியில் இந்தியத் தாய் தான் மிகச் சிறந்தவள் என்று முடிவு செய்யப்பட்டது.                     ஏனென்றால் கணவன் மனைவி, தந்தை மகன், மகள், தாத்தா, பாட்டி, பேரன், நட்பு, தலைவன், தொண்டன், என்ற எந்த உறவானாலும் ஓர் எல்லைக்கு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thennaitamilnadu.wordpress.com&amp;blog=7126894&amp;post=10&amp;subd=thennaitamilnadu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>                        <a href="http://polldaddy.com/poll/1692322/">View This Poll</a><br />
முதல் பதிவு:-<br />
                      ரஷ்யாவில் ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டின் தலைப்பு உலகிலேயே எந்த நாட்டுத் தாய் மிகச் சிறந்தவள் என்ற கருத்தாய்வு நடந்தது. அதில் எத்தனையோ நாட்டுத் தாய்களின் கருணையைப் பட்டியலிட்டுப் பார்த்து விட்டு இறுதியில் இந்தியத் தாய் தான் மிகச் சிறந்தவள் என்று முடிவு செய்யப்பட்டது.<br />
                    ஏனென்றால் கணவன் மனைவி, தந்தை மகன், மகள், தாத்தா, பாட்டி, பேரன், நட்பு, தலைவன், தொண்டன், என்ற எந்த உறவானாலும் ஓர் எல்லைக்கு மேல் துன்பங்களையோ அல்லது தவறுகளையோ பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் தாயென்பவள் தன் மகன் கொலையே செய்தாலும் அன்பிலே குறைவின்றி நடந்து கொள்வாள். அதனால் தான் இந்தியத் தாய் மிகச் சிறந்தவள் ஆனாள்.<br />
                     இந்தியாவில் தமிழ்த்தாய்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. மிக மிக மேன்மையானவர்கள். அதிலும் ஒளவையார் வாழ்ந்த காலத்திலே காசு, பணத்திற்குப் பதில் பண்டமாற்று வியாபாரமே நடைபெற்று வந்தது. பெரும் வணிகர்கள், அரசு மட்டும் தான் பொன்னை பணமாக வைத்திருந்தன. நம்பிக்கை, நாணயத்துக்கும் அதிக மதிப்பிருந்த காலத்திலே நமது தமிழ்த் தாயே தன் மகனை வெறுத்து விடும் செயலைச் சொல்கிறார் ஒளவை.<br />
                  கல்லானே யானாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்<br />
                  எல்லோரும் சென்று அங்கு எதிர் கொள்வர். இல்லானை <br />
                  இல்லாளும் வேண்டாள் மற்றீண்டெடுத்த தாய் வேண்டாள்<br />
                  செல்லா தவன் வாய்ச் சொல்.<br />
                  கல்வியறிவில்லாதவன் ஆயினும் காசு பணம் மட்டும் இருந்தால் போதும் எல்லோரும் சென்று அவரை புகழ்ந்து வரவேற்பர். காசு பணம் இல்லாத ஏழை மனிதன் எப்படிப்பட்ட அறிவாளியாக, உழைப்பாளியாக, பயனாளியாக இருந்தாலும் அவன் மனைவியே அவனை வெறுத்து விடுவாள். அவனை பத்து மாதம் சுமந்து  பெற்று வளர்த்த தாயே வெறுத்து விடுவாள். எதைச் சொன்னாலும் எந்த இடத்திலும் அவன் வாய்ச் சொல் செல்லாது &#8211; என்று ஒளவை பாடியிருக்கிறார்.<br />
                ஆக காசேதான் கடவுளடா ! கடவுளுக்கும் இது தெரியுமடா? என்ற வரிகள் ஈன, கீழ்த்தர, கேவல, அசிங்க, அவல விவசாயக் குடியிலே ஏழை விவசாயின் மகனாகப் பிறந்து சானத்தைச் சுமந்து வளர்ந்த எங்களுக்கும் பொருத்தம் தானே !<br />
                 1984-ஆம் ஆண்டு ஒரு லிட்டர் பாலின் விலை 8 ரூபாய். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 8 ரூபாய். இரண்டும் சமம். ஒரு தேங்காயின் விலை 4 ரூபாய் 1 லிட்டர் டீசலின் விலையும் 4 ரூபாய் தான் இரண்டும் சமம். 1 குவிண்டால் மஞ்சளின் விலையும் 1 பவுன் தங்கத்தின் விலையும் சமமே. ஓர் ஆள் கூலி 20 ரூபாய் இரும்பு விலையும் 8 ரூபாய்.<br />
                 விவசாயப் பொருட்களின் விலை இன்றும் அப்படியே உள்ளது. ஆனால் பெட்ரோல் 45 ரூபாயும், டீசல் 32-ம் ரூபாயும், தங்கம் 12,000 ரூபாயும் ஆள் கூலி 200 ரூபாயும், இரும்பு 40 ரூபாய்க்கும் உள்ளது. இவை ஒரு சில பொருட்களின் உதாரணம் மட்டுமே. விவசாய நிலங்களின் விலையை விட மற்றெல்லாம் அப்படியே தான் உள்ளது.<br />
                  அன்றைய விலையோடு ஒப்பிடும் போது டீசலின் விலையைப் போன்று தேங்காயின் விலையும் சமமாக, அதாவது 32 ரூபாய்  1 தேங்காய் விற்குமானால் <strong></strong></p>
<p><strong>நாங்கள் ஏன் கள் இறக்க வேண்டும்?<br />
</strong> </p>
<p>                      பால் விலையும் பெட்ரோல் விலையோடு ஒப்பிட்டு 1 லிட்டர் பாலின் விலை 45 ரூபாய்க்கு விற்குமேயானால் நாங்கள் ஏன் கள் இறக்க வேண்டும்.<br />
 இன்றைய நிலையில் 2.50க்கு தேங்காய் விலை உள்ளது. மரத்தில் உள்ள நோயின் காரணமாக சில மரங்களில் 5 தேங்காய்களே உள்ளன. தேங்காய் பறிக்கும் கூலி ஒரு மரத்துக்கு 7.50 ரூபாய் ஆகிறது. ஒரு  தேங்காய்க்கு பறிக்கும் கூலியே ரூ.1.50 போய் விடுகின்றது. தேங்காய் பொறுக்குதல், மட்டை உரித்தல், வாடகை செலவுகளைக் கணக்கிட்டால் தேங்காய் காணாமல் போய்விடுகிறது. பெருமைக்கு எருமை மேய்த்தது போல் மரம் மட்டுமே மீதமாய் பலன் ஏதுமற்ற சோகமாய் உள்ளது.<br />
 பால் உற்பத்தியைப் பார்த்தால் அறியாமையின் பாவம் மட்டும் தான் மிச்சம்.<br />
                   5 லிட்டர் பால் கறக்கும் மாடு கன்று ஈனும் தருணத்தில் வாங்கினால் சுமார் 20,000 ரூபாய் ஆகும். அதுவும் கலப்பின மாடு மட்டும் வாங்க முடியும். ஈன்ற கன்று (ஆண்) காளை என்றால் ஈன்ற மூன்றே நாட்களில் கறிக்காகவும், எங்களுக்கு காசு வேண்டும் என்பதற்காகவும் விற்று விடுவோம்.  இது அந்த இளங்கன்றின் பாவத்தை விவசாயி தன் குடும்பத்துக்கே விலை கொடுத்து வாங்குவதற்குச் சமம். கன்றில்லாமல் பால் சுரக்க மறுக்கும் மாடுகளின் இளங் கன்றுகளுக்கு பாலே சிறிது கூட விடாமல் அத்தனை பாலையும் கறந்து ரூ.8.00க்கே இன்றளவும் விற்பனை செய்து வருகிறோம். ஒரு நாள் பால் வரவு 5+5=10 படிக்கு ரூபாய் 80 என்றால் தவிடு, பருத்திக் கொட்டை செலவு ரூ.50 ஆகும். காலை முதல் இரவு முடிய ஒரு ஆள் கூலி இல்லாமல் விவசாயி பாடுபட வேண்டும். மேலும் அதற்கான தீவன பயிர்களின் செலவு கணக்கு ரூ.50 குறைந்த பட்ச செலவாகும்.<br />
                          இரண்டு, மூன்று மாதங்களில் பால் குறைந்து 2 படிக்கோ, 1 படிக்கோ வந்து விடும். அப்போதும் சினைப் பிடிக்கவில்லை என்றால் 20,000 ரூபாய்க்கு வாங்கிய மாட்டை வெறும் 6,000 ரூபாய்க்கு அடி மாட்டுக்கு விற்க வேண்டும். ஆக அசலில் 14,000 ரூபாயும் பால் உற்பத்தியில் பெரும் இழப்பும் சேர்ந்து எப்படிக் கணக்குப் பார்த்தாலும், ஒரு மாட்டிற்கு ஒரு ஆண்டிற்கு 30,000 &#8211; ரூபாய் நஷ்டம் ஏற்படும்.<br />
                            கன்றுக்கும் பால் விடாமல் கன்றின் பாவம் அனைத்தையும் ஏந்தி, தான் ஈன்ற தனது கன்றுக்கு கொஞ்சம் கூட பால் தராமல் விவசாயி முழுதும் கறந்து விடுவதால் எலும்பும், தோலுமாய் இருக்கும் தனது மகவை நினைத்து நாள் தோறும் அழும் தாய்ப் பசுவின் பாவத்தையும், சாபத்தையும் நாள்தோறும் ஏந்தும் விவசாயின் குடும்பத்தைப் போல் இவ்வுலகில் வேறு எதுவும் உளதோ?<br />
                      இந்தத் கொடுமையில் பால் உற்பத்தியைத் தொழிலாகச் செய்யும் நாங்கள் எப்படியய்யா கள் இறக்காமல் இருக்க முடியும்?<br />
                 விவசாயம் லாபமான தொழில் என்றால் ஏன் ரிலையன்ஸ், டாடா, பிர்லா, இன்போசிஸ், போன்ற எண்ணற்ற கம்பெனிகளும், இன்றைய தொழில் அதிபர்களும் விவசாயத்தில் வரும் லாபத்துக்கு வருமான வரியே இல்லையென்ற விதி இருந்தும் விவசாயத்தைச் செய்யவில்லை.<br />
                  அப்படியானால் விவசாயிகள் என்போர் இந்த தேசத்தின் நீண்டகால நிரந்தர அடிமை தானே. முன்னாளில் மன்னர்கள் காலத்தில் பகை முடிக்கப் படை எடுப்பர். அப்போது ஒரு நாட்டுப் படை இன்னொரு நாட்டினுள் நுழையும் போது யானை, குதிரை, எருதுகள் போன்ற படைகளை விட்டு போகுமிடமெல்லாம் விவசாய விளை பயிர்களை அழித்துக் கொண்டே போவார்கள். ஒரு நாட்டின் செல்வச் செழிப்பு விவசாயம் என்ற தொழிலை முன் வைத்தே கணிக்கப்பட்டதால் விவசாயப் பயிர்களை அழித்தாலே எதிரி மன்னனை பாதி அழிப்பதுக்குச் சமம். சண்டையின் போது மீதியும் அழியும். வெற்றியோ, தோல்வியோ போர் முடிந்து சில மாதங்களுக்குப் பின் தோற்றவன் வென்றவன் மீது போர் தொடுப்பான். அப்போது தான் ஏற்கனவே அழிந்து போனதிலிருந்து மீண்டு, மீண்டும் பயிர்செய்திருப்பான் விவசாயி. அதே பயிர்கள் மீண்டும் படையெடுத்துப் படைநடத்தி அழிக்கப்படும்.<br />
                       மன்னர்கள் காலம் முடிந்து வெள்ளையன், காலத்திலே 6-க்கு 5 பங்கு வரியாக வசூலித்து தன் சொந்த நாட்டையும், மக்களையும் பணக்காரனாக்கிக் கொண்டான் புத்திசாலி வெள்ளையன்.<br />
                                ஊரான், ஊரான் தோட்டத்திலே,<br />
                               ஒருத்தன் போட்டானா வெள்ளரிக்கா !<br />
                               காசுக்கு ரெண்டா விற்கச் சொல்லி<br />
                               காகிதம் போட்டானா வெள்ளக்காரன் ! <br />
                               வெள்ளக்காரன் பணம் வெள்ளிப்பணம்,<br />
                               வேடிக்கை காட்டுது சின்னப்பணம்.<br />
                             விதை காயாதல், கனியாதல், மணியாதல் படைப்பின் பாங்கு என்றாலும், நிலத்தை உழுது, விதைத்து, நீர் பாய்ச்சி, களை எடுத்து, நாய் நரிகள் தீண்டாமல் காவல் காத்து, பயிர்க்காலம் முழுதும் தாயாய் பார்த்து, கனியெடுத்துக் கொடுப்பவர்கள் நாங்கள் தானே !<br />
                            நாங்கள் மாதக்கணக்கிலே மண்ணோடு மண்ணாய் மடி தாங்கி வளர்த்த வெள்ளரிக்கு காகிதம் போட்டு விலை வைக்கிறான் வெள்ளைக்காரன். இன்று வரையில் நாங்கள் வைத்த விலை ஏதேனும் ஒரு விவசாய உற்பத்திப் பொருளுக்காவது உண்டா?<br />
                            எங்களுக்கும் வயிறுண்டு, வாயுண்டு. மனமுண்டு, மானமுண்டு, உடலுண்டு, குடும்பமுண்டு, குழந்தையுண்டு, நோயுண்டு, நொடிப்பொழுதில்  சாவுண்டு, செத்து விட்டால் செலவுமுண்டு, என்றென்றும் தீராத கடனுமுண்டு என்று, எம்மக்களின் உடல் தேய்ந்து உற்பத்தியாகும் உயிர்ப் பொருளுண்டு வாழும் உங்களுக்கு எங்கள் நினைவுண்டா? நாங்கள் சொன்னால் தான் கேட்கும் மனமுண்டா?<br />
                         மதுக்கடைகளில் விற்பனையாகும் காலிக் கண்ணாடிப் பாட்டிலெல்லாம் திரும்ப பெறப்பட்டதா? ஈழத்தில் கர்பிணித் தமிழ்ப் பெண்ணின் வயிறறுத்த சிங்கள இன வெறியன் கத்தியைப் போல் நம் மண்ணெங்கும் கண்ணாடிச் சில்லுகள் உழவனின் காலறுத்துக் கிடக்கின்றதே ! <br />
                எத்தனையோ பயிர் வளர்த்தோம். எத்தனை, எத்தனை மரம் வளர்த்தோம். ஒவ்வொரு மரமும் நான்கு பேருக்குத் தேவையான பிராண வாயுவை தன் வாழ்நாளெல்லாம் தந்து கொண்டிருக்கின்றதே !<br />
           எல்லா வழிகளும் அடைபட்டுப் போயின ! <br />
           எங்கள் உடல் தின்று வாழும், எல்லா உயிர்களும் எதிரிகளாயின !<br />
           கை, கால்கள் காலக் கதவிடுக்கில், சிறை பட்டுப் போயின !<br />
            தாயும் தந்தையும், குழந்தையும் குடும்பமும், வாழ்நாள் சுமையாய் ஆனது !<br />
            வேலியே பயிர்தனை நாளெல்லாம் மேய்ந்ததால்,<br />
            கூனிக் குறுகின உழவனின் மாண்புகள்<br />
            அழுதன எமக்காய் ! தென்னையும் கள்ளாய் !<br />
            கள்ளே ! எங்கள் கடவுளாய்ப் போனது<br />
            கடவுளே எங்கள் கள்ளாய் ஆனதால் !<br />
            சற்றே உயிர்த்தது உடலும் ! மனமும் !<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;-<br />
இரண்டாம் பதிவு:- 29.1.2011<br />
                    தக்காளி இன்றைய மனிதர்களின் வாழ்நாளில் கரைந்துவிட்ட முக்கிய காய் கனியாகும். ஒரு கிலோ  5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை  விற்பனையாகும்  ஒரு நிலையற்ற விலைபொருளாகும். ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய்க்கு விற்கும்போது  தினம்  ஒரு கிலோ சாப்பிடும் மக்கள் பத்து மடங்கு அதிகமாக தினம் பத்து கிலோ உண்பதால்தான் 50 ரூபாய்க்கு விற்கிறதா? இல்லை. தக்காளி உற்பத்தி பத்து மடங்கு குறைந்ததால்தான் சந்தையில் விலை உயருகிறது .<br />
                          மழை மற்றும் நோயின் காரணமாக ஒரு ஏக்கரில்  ஒரு நாளில் 500 ௦௦கிலோ  உற்பத்தி  50 கிலோவாக குறைந்துவிடும். விவசாயிக்கு நல்ல விளைச்சல் உள்ள போது 500  கிலோவுக்கு ரூ 5  வீதம்  2500 வருமானம்.  மழை மற்றும் நோயின் காரணமாக விளைச்சல் இல்லாதபோது 50 கிலோ  50  வீதம்  2500  வருமானம். ஆக  விவசாயிக்கு எப்போதும் வருமானம் ஒன்றுதான் .  எல்லா பயிர்களுக்கும் இதே நிலைப்பாடு .<br />
                      நுகர்வோர் ஒரு மடங்கு கூட அதிகம் உண்ணாத போது  விவசாயிக்கும் ஒரு மடங்கு கூட அதிக வருமானம் வராத போது விலை மட்டும் பத்து மடங்கு உயர்வது என்பது இந்த நாட்டு மக்களின் தலைவிதி என்றுதான் சொல்ல வேண்டும். விவசாயிக்கும் மக்களுக்கும் இடையில் சரி செய்து சமன் செய்து வழங்க இயலாத அரசுதான் விலை உயர்வுக்கு காரணம் ஆகும்.<br />
                  இந்நாட்டில் போராட வேண்டியவர்கள்  விவசாயிகள் மட்டுமல்ல  நுகர்வோர்களாகிய  நீங்களும்தான்  என்பதை  இன்றாவது உணருங்கள்.<br />
                   விவசாயம் என்பது ஒரு தவம். எதன்மீதும் நம்பிக்கையற்று  அல்லது எல்லாவற்றின் மீதும் கண்மூடித்தனமான நம்பிக்கையின் பேரில் இரவு பகல் பாராமல் செய்து முடிக்கும் கண்கட்டி வித்தை. இன்றைய விவசாயம் குருட்டு பூனை விட்டத்தில் பாய்தலுக்கு   சமம்.<br />
                                   தமிழகத்தில் தென்னைகளின் எண்ணிக்கை சுமார் 8 கோடியாகும். ஒரு தென்னைக்கு நாள் ஒன்றுக்கு  ௦௦       100   லிட்டர்  தண்ணீர் தேவை. ஒரு கன  அடியில்   28.3 லிட்டர் தண்ணீர் இருக்கும். 8 கோடி தென்னைகளுக்கு நாள் ஒன்றுக்கு 32 கோடி  கன  அடி தண்ணீர் வேண்டும்  ஒரு வினாடிக்கு 3703.7  கோடி  கன  அடி தண்ணீர் 365 நாட்களும் பாயவேண்டும். தமிழகத்தில் உள்ள 8 கோடி தென்னைகளுக்கு ஓர் ஆண்டுக்கு 112.65  T.M.C   நீர் தேவைப்படுகிறது.  அவ்வாறே தென்னை வேளாண்மைக்கு செலவிடப்படுகிறது.  இது மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான  90    T.M.C  நீருக்கும்  பவானிசாகர்  அணையின்   30    T.M.C  நீர் இருப்புக்கு சமம்.<br />
            8  கோடி தென்னைகளும் சேர்ந்து தினம் 4  கோடி  ரூபாய் சம்பாதிக்கிறது. அதாவது 800  கோடி லிட்டர் தண்ணீருக்கு  4  கோடி  ரூபாய் வருமானம் என்றால்  ஒரு நாளுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாய்ச்சி தென்னை விவசாயம் செய்தால் 0.005  அரை பைசா வருமானம் வருகிறது.<br />
             விவசாயின்   உழைப்பு,  மண்ணின் வாழ்நாள் பயன்பாடு, இலவச மின்சாரம், உரம்,  மருந்து, நோயினால், வண்டுகளினால் ஏற்படும் இழப்பு  எல்லாம் இந்த ஒரு லிட்டர் தண்ணீரின் உயிர்ப்பில்<br />
சம்பாதிக்கப்படும் அரைக்காசு வருமானத்தில் அடிமைப்பட்டுக்கிடக்கின்றது தென்னை விவசாயிகளின் வாழ்க்கை.   கோகோ கோலா நிறுவனம் ஒரு லிட்டர் தண்ணீரில் 40  ரூபாய் சம்பாதிக்கிறது. திருப்பூரில் சாயக்கழிவு நீராக மாற்றும் ஒரு லிட்டர்  தண்ணீர் ஐந்தரைகாசு. எரிசாராயத்தை குடி சாராயமாக மாற்றுவோர் ஒரு லிட்டர் தண்ணீரை   400   ரூபாயாக்கி தன் ஆசை     நாயகிக்கி தனித்தீவில்  சொகுசு மாளிகை வாங்குகிறார்கள்.<br />
             இந்த நாளில் எந்த ஊரில் ஒரு லிட்டர் தண்ணீர் அரைக்காசுக்கு விற்கப்படுகின்றது? தண்ணீர் பற்றாக்குறையுள்ள தமிழகத்தில் தென்னை பயிரிடசொன்னது யார்? நானோ, என் அப்பனோ, பாட்டனோ சொல்லவில்லை.  பாட்டன் முப்பாட்டன் எல்லாம் சோளம், கம்பு, ராகி, திணை, சாமை, வரகு போன்ற  புரதச்சத்து மிக்க தானியங்களை பயிரிட்டு நன்றாகத்தானே வாழ்ந்தார்கள்.<br />
                ஒரு லிட்டர் கள்ளின் விலை 40 ரூபாய் என்றால் அதில் 10 ரூபாய் தொழிலாளிக்கு சென்றால்  மீதம்  30  ரூபாய் விவசாயிக்கு வருகிறது. ஒரு நாளுக்கு ஒரு மரம் குறைந்தது 2  லிட்டர் உற்பத்தியானால்  60  ரூபாய் வருமானம் கள்   உற்பத்தியில்    கிடைக்கிறது.<br />
           தேங்காய் உற்பத்தியில்  ஓர் ஆண்டுக்கு ஒரு தென்னை  தரும்  360  ரூபாயை  கள் இறக்குவதன் மூலம் ஆறே நாட்களில் கிடைக்கிறது.<br />
                  1984-ஆம் ஆண்டு ஒரு லிட்டர் பாலின் விலை 8 ரூபாய். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 8 ரூபாய். இரண்டும் சமம். ஒரு தேங்காயின் விலை 4 ரூபாய் 1 லிட்டர் டீசலின் விலையும் 4 ரூபாய் தான் இரண்டும் சமம்.<br />
       கள்ளோடு ஒப்பிட்டால்  ஒரு தேங்காயை 150  ரூபாய்க்கும் டீசலோடு   ஒப்பிட்டால் ஒரு தேங்காயை 40 ரூபாய்க்கும் அரசே நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யுமானால்  பணத்தை கருத்தில்  கொண்டு தென்னையைப்பொருத்த  வரை யாரும் கள்  இறக்கத்தேவையில்லை. ஆனால் பனை மரத்தை   சுண்ணாம்புச்சூலைக்கா   வெட்ட முடியும்?<br />
                           கரும்பில் இருந்து வருவது கரும்புப்பால். கிழுவ மரத்தில் இருந்து வருவது கிழுவம்  பால். கள்ளியில் இருந்து வருவது கள்ளிப்பால். தென்னையிலிருந்து வந்தால் தென்னம்பால் பனையிலிருந்து வந்தால் பனம்பால்.   தென்னை, பனை பாளையிலிருந்து வடியும் பாலை சுண்ணாம்பு கலக்கி புளிக்காமல் எடுத்தால் பதநீர். புளிக்க  வைத்தால் கள்.  புளிக்காத கள் சத்தான உணவு &#8212; காந்தி சொன்ன உண்மை.  ஏன் இந்த சத்தான உணவை பதப்படுத்தி புட்டிகளில் அடைத்து குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் உட்பட அனைவரும் அருந்த கொடுக்க கூடாது?  மக்களுக்கு கிடைக்க வேண்டிய இந்த சத்தான உணவை  அரசு தெரியாமல் தடுத்தால் அடி முட்டாள்தனம். தெரிந்தே தடுத்தால் அரசியல் அதிகார பயங்கர வாதம்.  தென்னம்பால் இறக்க தடையென்றால் காந்தியே பொய்.<br />
                     தென்னம்பால் புளித்து கள்ளாக  மாறினால்  மது என்று கள்ளை தடை செய்யும் அரசு, கரும்பு பாலிலிருந்து சக்கரையாக மாறும்போது எரிசாராயம் வருகிறதே என்று சக்கரை உற்பத்தியை  தடை செய்யுமா?<br />
                        டாஸ்மாக் சாராய வருமானத்தில் தான் மக்கள் நலத்திட்டங்களை செய்ய முடிகிறது என்று கூறும் அரசு<br />
  சாராய தொழிற்சாலைகளை மட்டும் ஏன் தனியாரிடம் விட்டுள்ளது . சாராய தொழிற்சாலைகளையும் அரசுடைமை ஆக்கினால் இன்னும் அதிக வருவாய் வருமல்லவா. </p>
<p>                2,58,000 பேர் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில்  தமிழகத்தில் பயனடைந்ததாகவும்,  முன்னால் ஆட்சியாளர்கள் இதனைசெய்யவில்லை இது நாங்கள் செய்த சாதனை என்றும் மாண்புமிகு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாக சன் நியூஸ் செய்தியில் சொன்னார்கள்.<br />
      ஒரு ஏக்கர் நெல் பயிரிட்டு அறுவடை செய்ய அதிக பட்சம்  40  பேர் பணியாளர்கள் நெல் வெள்ளாமையின்  மொத்த காலத்துக்கு தேவைப்படுவார்கள் . 40  பேர் வேலைசெய்து நெல் பயிரிட்டால் சராசரியாக ஒரு ஏக்கருக்கு 40 மூட்டை நெல் உற்பத்தியாகும் .   2,58,000   ௦௦௦  பேர் நெல்  உற்பத்திக்கு பயன்பட்டிருந்தால் 2,58,௦௦௦000  மூட்டை நெல் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.  அதாவது   1,29,000  மூட்டை அரிசி. 96,75,000 கிலோ அரிசியாகும்.  ஒரு மனிதன் ஒரு வேலைக்கு  200  கிராம் அரிசி சாப்பிட்டால் ஒரு நாளுக்கு தேவையான மூன்று வேளையும் சேர்த்து  600 கிராம்  என்றால்  96,75,000  கிலோ அரிசி 1,61,25,000       நாட்களுக்கு  அதாவது     44,178.08     ஆண்டுகளுக்கு ஒரு தனி மனிதனுக்கு தேவையான உணவாகும்.  அல்லது தமிழக மக்கள் தொகையான ஆறு கோடி மக்களுக்கும்   0.16125   கிராம் அரிசி ஒவ்வொருவருக்கும் கிடைக்கும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு   தனி மனிதனுக்கும் இது ஒரு வேளை உணவாகும்.<br />
                          ஒரு  ஜே.சி.பி  இயந்திரம்  2  மணி நேரத்தில் செய்யும் வேலையை 300 பேர்கள் வாரக்கணக்கில் செய்து கொண்டிருப்பதற்கு பெயர்    மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி  திட்டம். தமிழகத்தின் ஆறு கோடி மக்களுக்கும் பங்கிட்டு கொடுத்தால்  கிடைக்க வேண்டிய    0.16125    கிராம் அரிசி உற்பத்தியை,  தமிழக மக்களின் ஒரு வேளை தனிமனித உணவை,   2,58,000 பேர்களின் மனித உழைப்பை  வீணடித்து விட்டதுக்கு பெயர் சாதனையா?<br />
                          இது விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் அரசு செய்த வாழ்நாள் துரோகம்.  இதை தெரிந்தே செய்திருந்தால் அரசியல் அதிகார பயங்கர வாதம்.   தெரியாமல் செய்திருந்தால்  அடிமுட்டாள்தனம்.<br />
                                                                                                                    - தொடரும்<br />
                                                                                                           C.P.ஈஸ்வரன்(9789511777)</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/thennaitamilnadu.wordpress.com/10/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/thennaitamilnadu.wordpress.com/10/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/thennaitamilnadu.wordpress.com/10/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/thennaitamilnadu.wordpress.com/10/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/thennaitamilnadu.wordpress.com/10/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/thennaitamilnadu.wordpress.com/10/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/thennaitamilnadu.wordpress.com/10/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/thennaitamilnadu.wordpress.com/10/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/thennaitamilnadu.wordpress.com/10/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/thennaitamilnadu.wordpress.com/10/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/thennaitamilnadu.wordpress.com/10/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/thennaitamilnadu.wordpress.com/10/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/thennaitamilnadu.wordpress.com/10/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/thennaitamilnadu.wordpress.com/10/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=thennaitamilnadu.wordpress.com&amp;blog=7126894&amp;post=10&amp;subd=thennaitamilnadu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://thennaitamilnadu.wordpress.com/2009/06/09/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/fefd5c3a8e5f2be9345e0f4ba11cbd37?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thennaitamilnadu</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
